Skip to main content

தேனி மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் மூலம் 3000-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயனடைந்துள்ளனர்

தேனி, மார்ச்.25-

தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்கள். தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் பொதுமக்கள், தங்களுக்கு தேவையான மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளதாலும், நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளுக்கு தொடர்ந்து மருந்துகளை வாங்க வேண்டியுள்ளதாலும் குறைந்த விலையில் மருந்துகளை வழங்க "முதல்வர் மருந்தகம்" என்ற புதிய திட்டம் மூலம் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் கடந்த 24.2.2025-அன்று தமிழ்நாடு முழுவதும் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் பி.பார்ம்/ டி.பார்ம் (B.Pharm/D.Pharm) படித்த 1000 பட்டதாரிகள் வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் தொழில் முனைவோர் மூலம் 10 முதல்வர் மருந்தகங்களும், கூட்டுறவுத்துறையின் முலம் 8 முதல்வர் மருந்தகங்களும் என மொத்தம் 18 முதல்வர் மருந்தகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மருந்தகங்களில் பொதுமக்களுக்கு தேவையான தரமான மருந்துகள் சந்தை மதிப்பை காட்டிலும் 75% குறைந்த விலையில் கிடைக்கிறது. 
மேலும் ஜெனரிக், பிரான்டட் மருந்துகளும், சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருந்துகள் மற்றும் சர்ஜிகல் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து மருந்துகளும் 25% வரை தள்ளுபடி விலையிலும் கிடைக்கிறது. எனவே, மருந்துகள் தேவைப்படுவோர் தங்களுக்கு தேவையான மருந்துகளை முதல்வர் மருந்தகங்களில் குறைந்த விலையில் பெற்று பயனடையலாம்.
முதல்வர் மருந்தகங்கத்தில் மருந்துகள் வாங்கி பயனடைந்த புண்ணியவதி என்பவர் தெரிவிக்கையில், என் பெயர் புண்ணியவதி. நான் தேவதானபட்டியில் வசித்து வருகிறேன். எனக்கு 58 வயதாகிறது. நான் நீரிழிவு மற்றும் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருகிறேன். எனக்கு ஒரு மாதத்திற்கு மருந்துகள் வாங்குவதற்கு குறைந்தது மூவாயிரம் ரூபாய் செலவாகும். எனக்கு வயதாகி விட்டதால் தொடர்ச்சியாக அதிக நேரம் வேலையும் செய்ய இயலாது. இதனால் மாதந்தோறும் மருந்துகள் வாங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தேன்.

தற்போது, தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகத்தில் மிகக்குறைந்த விலையில் மருந்துகள் வாங்கியுள்ளேன். நீரிழிவு நோய் மற்றும் இரத்த அழுத்த நோய்க்கான மருந்துகள் தனியார் மருந்தகங்களை விட மிக குறைந்த விலையில் தரமாக கிடைப்பதால் அதனை வாங்கி பயன்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். என்னைப் போன்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய சூழ்நிலையில் உள்ளவர்கள் பயனடையும் வகையில் முதல்வர் மருந்தகங்களை தொடங்கி வைத்துள்ள தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

தொகுப்பு :-

இரா.நல்லதம்பி,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,

அ.கதிரவன்
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி)

........................

Comments