Skip to main content

தேனி தாலுகா, அல்லிநகரம் மலையடிவார கல்குவாரியில் இமாலய கனிமவளக் கொள்ளை: இந்து மக்கள் கட்சி தொண்டரணியினர் நூதன முறையில் சப்-கலெக்டரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்த திட்டம்

தேனி, மார்ச்.22-

இந்து மக்கள் கட்சி தொண்டரணி மாநில துணைத்தலைவர் குரு அய்யப்பன் வெளியீட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, வீரப்ப அய்யனார் கோவில் வழியாக பூதிப்புரம் செல்லும் சாலையில் "சிவராம் " என்பவர் நடத்திவரும் கல் குவாரியிலிருந்து தினசரி சுமார் 200-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் மூலமாக கனிம வளங்கள் முறைகேடாக வெட்டி எடுக்கப்பட்டு கனிமவள கொள்ளை நடைபெற்று வருகிறது.

இந்த குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு அதிக கனிம வளம் முறைகேடாக சட்ட விரோதமாக வெடி மருந்துகளை பயன்படுத்தி வெட்டி எடுத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவு கனிம வளங்களை வெட்டி எடுத்ததாக அபராதம் விதிக்கப்பட்ட இந்த குவாரி தொடர்ந்து செயல்படுவது எப்படி? தேனி மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் கிருஷ்ணமோகன் உதவியுடன் ஜரூராக இமாலய அளவு கனிமவள கொள்ளை நடைபெற்று வருகிறது.

காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்த குவாரியை முற்றுகையிட்டு உள்ளே கனிம வளங்களை கொள்ளையடித்துக் கொண்டுள்ள 200-க்கும் மேற்பட்ட லாரிகளை சிறைபிடிப்போம்.
அதற்கு முன்னதாக அல்லிநகரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிவராமன் என்பவர் நடத்தி வரும் கல்குவாரி மற்றும் கிரசரில் இருந்து தினசரி 200-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் மூலமாக கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்படுவதை கண்டித்து, இந்து மக்கள் கட்சி தொண்டர் அணி சார்பாக பெரியகுளம் சப்-கலெக்டர் அவர்களிடம் நூதன முறையில் மனு அளிக்கும் போராட்டம். திங்கட்கிழமை 24.3.2025 அன்று காலை 11 மணி அளவில் பெரியகுளம் சப் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இவ்வாறு இந்து மக்கள் கட்சி (தொண்டர் அணி) மாநில துணைத்தலைவர் குரு அய்யப்பன் தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

நாகராஜ், தலைமை நிருபர் 


..........................

Comments