Skip to main content

தேனியில் இந்து மக்கள் கட்சி தொண்டரணி மாநில செயற்குழு கூட்டம்



தேனி, மார்ச்.17-
இந்து மக்கள் கட்சி தொண்டரணி (தமிழகம்) மாநில செயற்குழு கூட்டம் தேனியில் உள்ள தெய்வா ஹோட்டலில் 16.3.2025 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்து மக்கள் கட்சி தொண்டரணி (தமிழகம்) மாநில துணைத்தலைவர் குரு அய்யப்பன் தலைமை தாங்கினார். 
தொண்டரணி மாநில தலைவர் மோகன், பொதுச்செயலாளர் அண்ணாத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேனி மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.
கூட்டத்தில் இந்து மக்கள் கட்சி தொண்டரணி (தமிழகம்) நிறுவனர் அர்ஜூன் சம்பத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்சியின் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார். 
கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் முருகவேல், மாவட்ட செயலாளர் பாலமுருகன், மாவட்ட பொதுச்செயலாளர் கணேசன், தேனி நகர தலைவர் அழகுமுருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 
கூட்டத்தின் போது உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பெரியகுளம் மற்றும் போடிநாயக்கனூரில் மாம்பழ கூழ் தொழிற்சாலை அமைக்கும் பணி செயல்படாமல் உள்ள நிலையில் அதனை செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். 
தேனி மாவட்டத்தில் சுற்றி திரியும் தெரு நாய்களை கட்டுபடுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட ஆயுஷ் மருத்துவமனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. 
முடிவில் தேனி மாவட்ட அமைப்பாளர் கருப்பையா நன்றி கூறினார்.

நாகராஜ், தலைமை நிருபர் 


.............................

Comments