Skip to main content

ஆண்டிபட்டி அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உலக மகளிர் தின விழா

தேனி, மார்ச்.10-

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி எஸ்.ரெங்கநாதபுரம் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ஆர் .ரமா பிரபா கலந்து  கொண்டு சிறப்புரையாற்றினார். ஊக்க மூட்டல் பேச்சாளர் ரத்ன மகாலட்சுமி பயிற்சியாளர்களுக்கு தக்க அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார். 

அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ஜெ.சரவணன் வரவேற்றார். விழாவில் பயிற்சி அலுவலர் ரமேஸ் மற்றும் மேலாளர் சேதுராமலிங்கம் மகளிர் தினத்தையொட்டி மகளிர் தின சிறப்பு குறித்து வாழ்த்தி பேசினார்கள்.

இதில் நேரு யுவகேந்திரா அமைப்பின் சார்பாக கோகுல கிருஷ்ணன், துரைமுருகன் கலந்து கொண்டனர் . விழாவின் போது பயிற்சி மாணவிகள் சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் முதல்வர் ஜெ.சரவணன் சிறப்பு பரிசுகளை வழங்கினார். 

முடிவில் பயிற்றுனர் ஆர். திலகம் நன்றி கூறினார்.

சசி துரை, சிறப்பு நிருபர் 


...........................

Comments