தேனி, பிப்.28-
தேனியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மண்டல எண் 8-ன் சார்பில் திண்டுக்கல், கரூர், தேனி ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகளின் கிராம காங்கிரஸ் கமிட்டி மறுசீரமைப்பு ஆய்வு கூட்டம் தேனி தெய்வா ஹோட்டலில் 28.2.2025 அன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநில மேலாண்மை துணை ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். மண்டல ஒருங்கிணைப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ., பழனிச்சாமி, தேனி பாராளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் பாண்டியன், திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் பேங்க் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தேனி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கூடலூர் முருகேசன், திண்டுக்கல் மாநகர தலைவர் துரை மணிகண்டன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் மச்சக்காளை, நாகராஜ், தேனி மாவட்ட பொருளாளர் அப்பு என்ற பாலசுப்பிரமணியன், மாவட்ட துணைத்தலைவர் சன்னாசி, தேனி மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணவேணி சக்திவேல், மாவட்ட செயலாளர் அபுதாகிர், மாநில பொதுக்குழு உறுப்பினர் முனியாண்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் சம்சுதீன், சித்திக் உள்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் போது காங்கிரஸ் கமிட்டியில் மறுசீரமைப்பு செய்த நிர்வாகிகள் பட்டியல் குறித்து ஆய்வு செய்யப்பட்டு புதிய நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. முடிவில் தேனி காங்கிரஸ் நகர தலைவர் கோபிநாத் நன்றி கூறினார்.
நாகராஜ், செய்தி ஆசிரியர்
.........................
Comments