Skip to main content

மதுரை குமாரத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

மதுரை, பிப்.27-

மதுரையில் அ.தி.மு.க புறநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் முன்னாள் முதல்வரும், கழக முன்னாள் பொது செயலாளர் ஜெ.ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் குமாரத்தில் மேற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சர் தமிழக சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவியாக பெண்களுக்கு தையல் மிஷின் மற்றும் உதவிகளை வழங்கினார். 
இதனைத்தொடர்ந்து  கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வரும் 2026-ம்  ஆண்டு தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அம்மா ஆட்சியை கழக பொதுசெயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நல்லாட்சி தருவோம் என்றார்.

இந்த கூட்டத்தில் கொள்கை பரப்பு துணைச்செயலாளர் சரவண பெருமாள், தலைமை கழக பேச்சாளர் துகிலி. நல்லுச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் உசிலம்பட்டி மகேந்திரன், தமிழரசன், கருப்பையா, மாணிக்கம், சதன்பிரபாகரன், அம்மா பேரவை துணை செயலாளர் ராஜேஸ் கண்ணா, மாவட்ட மகளிர் அணி வக்கீல் லட்சுமி, பஞ்சவர்ணம், கழக வெற்றிச்செல்வன், பாசறை பொறுப்பாளர்கள் வக்கீல் திருப்பதி, ஒன்றிய செயலாளர்கள் வாடிப்பட்டி காளிதாஸ், அலங்காநல்லூர் ரவிச்சந்திரன், சோழவந்தான் கொரியர் கணேசன் மற்றும் பேரூர் செயலாளர்கள், கிளை செயலாளர்கள், பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சீனிவாசன், உதவி ஆசிரியர் 


..........................

Comments