தேனி பிப்.25-
தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சி அம்பி வெங்கடசாமி திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 50 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலையில் 24.2.2025 அன்று நடைபெற்றது.
வளைகாப்பு என்பது குழந்தையின் பிறப்பை கொண்டாடுவதற்காகவும், கர்ப்பிணி தாய்மார்களின் மனரீதியான மகிழ்ச்சிக்கும் மற்றும் உடல் ரீதியான ஆரோக்கியத்திற்காகவும் நடத்தப்படும் ஒரு சிறப்பான நிகழ்வாகும். அந்த வகையில் தேனி மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களில் உள்ள 900 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வட்டாரம் வாரியாக நடத்தப்பட்டு வருகிறது.
கர்ப்பிணி தாய்மார்கள் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொண்டு நல்ல ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்பதற்காக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மூலம் கருவுற்ற கர்ப்பிணி பெண்களுக்கும் குழந்தை பிறந்தது முதல் 6 மாதம் வரை தாய்மார்களுக்கும் நாள் ஒன்றுக்கு 150 கிராம் வீதம் மாதத்தில் 20 நாட்களுக்கு இணை உணவு வழங்கப்படுகிறது.
மேலும், குழந்தை பிறந்த 6 மாதத்திற்கு பிறகு 2 வயது வரை குழந்தைக்கு 125 கிராம் வீதமும், 2 வயது முதல் வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அன்றாடம் உட்கொள்ளும் உணவு வகைகளோடு தினமும் தலா 10 கிராம் வீதம் இணை உணவு விநியோக வழங்கப்படுகிறது. இதனை கர்ப்பிணி தாய்மார்கள் பயன்படுத்தி ஆரோக்கியமான குழந்தைகளை வளர்க்க வேண்டும்.
தேனி வட்டாரத்திற்குட்ட 50 கர்ப்பிணி தாய்மார்களுக்கும் பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட 125 கர்ப்பிணி தாய்மார்களுக்கும். இதற்கு முன்னதாக பெரியகுளம் மற்றும் கடமலை மயிலாடும்பாறை வட்டத்திற்குட்ட 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த வளைகாப்பில் சேலை, வளையல், மஞ்சள் குங்குமம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்பட்டது
சமுதாய வளைகாப்பில் பங்கேற்ற கர்ப்பிணி பெண் நந்தினி என்பவர் தெரிவிக்கையில்,
என் பெயர் நந்தினி பாலமுருகன் நான் தேனி.அல்லிநகரம் பகுதியில் வசிக்கின்றேன். அரசின் சார்பின் கர்ப்பிணி தாய்மார்களுக்கு நடத்தப்படும் சமுதாய வளைகாப்பில் கலந்து கொண்டது எனக்கு மிகந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. சீர்வரிசைகள் உள்ளடக்கிய பரிசு பொருட்களை எங்களுக்கு பரிசாக வழங்கி உள்ளார்கள்.
மேலும் அங்கன்வாடி மையங்கள் மூலம் சத்தான உணவு பொருளும், தேவையான அறிவுரைகளும் வழங்கப்படுகிறது. இத்தகைய நிகழ்ச்சியை நடத்தி கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தேனி-அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற தலைவர் பிரியா பாலமுருகன், துணைத்தலைவர் செல்வம் திட்டக்குழு உறுப்பினர் நாராயண பாண்டியன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அலுவலர்
நாகராஜ், முதன்மை நிருபர்
........................
Comments