தேனி மாவட்டத்தில் 18 முதல்வர் மருத்தகங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்களை காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார்.
தேனி, பிப்.25-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 24.2.2025 அன்று சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்திலிருந்து கூட்டுறவுத்துறை சார்பில் தேனி மாவட்டத்தில் 18 முதல்வர் மருந்தகங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருத்தகங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து தேனி-அல்லிநகரம் நகராட்சி சமதர்மபுரத்தில் உள்ள முதல்வர் மருத்தகம் திறப்பு விழாவில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மருந்தகத்தை பார்வையிட்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொது மருந்துகளையும் (Generic Medicines மற்றும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைப்பதற்காகவும். தொழில் முனைவோரை உருவாக்குவதற்காகவும் தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும் அறிவித்தார்கள்.
அதனடிப்படையில் இன்று தேனி மாவட்டத்தில் தொழில் முனைவோர் மூலம் 10 முதல்வர் மருந்தகங்களும் கூட்டுறவுத்துறையின் முலம் 8 முதல்வர் மருந்தகங்களும் மொத்தம் 18 முதல்வர் மருந்தகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது தேனி மாவட்டத்தில் பொது மருந்துகளையும், பிற மருந்துகளையும் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்க செய்யும் வகையில்,
தேனி பகுதியில் (தேனி.பிடிராஜன் தெரு, கொடுவிலார்பட்டி பழனிசெட்டிபட்டி, அல்லிநகரம்) 4 மருந்தகங்கள்
போடிநாயக்கனூர் பெரியாண்டவர்புரம் தெருவில் ஒரு மருந்தகம்
பெரியகுளம் பகுதியில் (ஜெயமங்கலம், வடுகபட்டி, தேவதானப்பட்டி) 3 மருந்தகங்கள்
ஆண்டிபட்டி பகுதியில் (ஜக்கம்பட்டி, கண்டமனூர், கோவில்பட்டி) 3 மருந்தகங்கள்
உத்தமபாளையம் பகுதியில் (மேலக்கூடலூர், கோம்பை, தேவாரம், கம்பம், கூடலூர், க.புதுப்பட்டி, கம்பம் மெட்டு ரோடு) 7 மருந்தகங்கள் என 18 மருத்தகங்கள் அனைத்து வட்டாரங்களிலும் முதல்வர் மருந்தகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தொழில் முனைவோர் முதல்வர் மருந்தகங்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் நடத்தும் முதல்வர் மருந்தகங்களுக்கு தலா ரூ.15 இலட்சம் ஜெனிரிக் மருந்துகள் மானியமாக அளிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மருந்தகங்களில் 25 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும். பொதுமக்கள் முதல்வர் மருந்தகத்தில் குறைந்த விலையில் மருத்துகள் பெற்று பயன்பெற்றுக் கொள்ளலாம்
முதல்வர் மருந்தகம் மூலம் தொழில் முனைவோராக உருவாகி உள்ள கார்த்திகா என்பவர் தெரிவிக்கையில்,
என் பெயர் கார்த்திகா, நான் தேனி மாவட்டம், வயல்பட்டி பகுதியில் வசிக்கின்றேன். முதல்வர் மருந்தகம் அமைத்து தொழில் முனைவோராக உருவாவதற்கு அரசின் சார்பில் ரூ.3 இலட்சம் மானியம் வழங்கப்பட்டது. தேனி சமதர்மபுரத்தில் முதலமைச்சர் அவர்களால் முதல்வர் மருத்தகம்
திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏழை எளிய மக்கள் தனியார் மருந்தகங்களில் அதிக விலைக்கொடுத்து வாங்க வேண்டிய மருத்துகளை மிகக்குறைந்த விலையில் முதல்வர் மருத்தகங்களில் வாங்கிக்கொள்ளலாம். என்னை போன்றவர்களுக்கு இத்தகைய வாய்ப்பினை ஏற்படுத்தி தந்து தொழில் முனைவோராக உருவாக்கி உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தேனி.அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், துணைத்தலைவர் செல்வம். திட்டக்குழு உறுப்பினர் நாராயண பாண்டியன், தேனி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாகராஜ், முதன்மை நிருபர்
.........................
Comments