மதுரை, பிப்.24-
மதுரை மாவட்டம், சோழவந்தான் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொது செயலாளர் ஜெ. ஜெயலலிதா 77-வது பிறந்தநாள் விழாவை அதிமுக-வினர் பல்வேறு இடங்களில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இதில் வாடிப்பட்டி ஒன்றிய கிராமங்களிலும்,சோழவந்தான் பேரூர் பகுதியில் உள்ள 18 வார்டுகளிலும் ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில், பேரூர் செயலாளர் முருகேசன் முன்னிலையில் ஜெயலலிதா உருவபடத்தை மலர்களால் அலங்கரித்து மலர் தூவி மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயகுமார், மு.சேர்மன் பாண்டியம்மாள் ராமு, ரொட்டி கடை முருகேசன், வார்டு செயலர் தண்டபாணி, மணிகண்டன் ராமு , சோலை சிவா, பிரேம், பெட்ரோல் பங்க் சசிகுமார், சசி, சாக்கு முருகேசன், கென்னடி,மெடிக்கல் சங்கர், மற்றும் பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.
சீனிவாசன், உதவி ஆசிரியர்
...........................
Comments