Skip to main content

தேனியில் ஐ.என்.டி.யு.சி நிர்வாகிகள் அறிமுக விழா மற்றும் ஆலோசனை கூட்டம்

தேனி, பிப்.23-

இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் ஐ.என்.டி.யு.சி நிர்வாகிகள் அறிமுக விழா மற்றும் ஆலோசனை கூட்டம் தேனி பழனிசெட்டிபட்டி பகுதியில் உள்ள கண்ணம்மா ஹோட்டலில் 23.2.2025 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஐ.என்.டி.யு.சி மாநில தலைவர் ஜெகநாதன் தலைமை தாங்கினார்.

மாநில செயலாளர் களஞ்சியம், டி.என்.எஸ்.டி.சி மாநில பொது செயலாளர் ஜீவன் மூர்த்தி, துப்புரவு மாநில செயலாளர் அருட்ஜோதி, போடி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தின் போது ஐ.என்.டி.யு.சி தேனி மாவட்ட தலைவராக முன்னாள் போடி வட்டார காங்கிரஸ் தலைவர் ஜம்பு சுதாகர் தேர்வு செய்யப்பட்டார்.
கூட்டத்தில் டி.என்.எஸ்.டி.சி. மண்டல அமைப்பு செயலாளர் அனந்த நாராயணன் மற்றும் ஐ.என்.டி.யு.சி 14 துணை அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தேனி மாவட்டத்தில் உடல், உழைப்பு தொழிலாளர்களுக்கு உயிர் பலி விபத்து ஏற்படும் போது அரசு வழங்குகின்ற நிவாரணத்தொகை ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும். 
தேனி மாவட்டத்தில் நூல் மில்களில் பணிபுரியும் பணியாளர்களை (அவுட்சோர்சிங் மற்றும் காண்ட்ராக்ட்) முறையினை கைவிட்டு மில் உரிமையாளர்கள் பணியாளர்கள் நேரடியாக நியமனம் செய்ய வேண்டும்.
நூல் மில்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அரசு வகுத்த குறைந்தபட்ச கூலியினை வழங்க வேண்டும்.

தேனி மாவட்டத்தை ஒட்டி உள்ள அண்டை மாநிலமான கேரளாவிற்கு தேயிலைத் தோட்ட வேலைக்கு வாகனங்களில் அதிகப்படியான பெண் தொழிலாளர்கள் ஏற்று செல்லும் வாகனங்களை கண்காணித்து மோட்டார் வாகன சட்டப்படி பயணிகளின் உயிர் பாதுகாப்பிற்கு உறுதி செய்யும் விதமாக வட்டார போக்குவரத்து அலுவலர் (RTO) கண்காணிக்க வேண்டும்.
தேனி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேக்கரிகளுக்கு முன்பு போலீஸ் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள உயிர் பலி ஏற்படுத்தும் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகஉள்ள பேரிக்கார்டு தடுப்புகளை அப்புறப்படுத்த வேண்டும்.

தேனி மாவட்டத்தில் உரிமம் பெறாமல் இரவு நேரங்களில் கனிம வளத்தை அண்ட மாநிலங்களுக்கு எடுத்து செல்வதை கண்டுபிடித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. 

நாகராஜ், முதன்மை நிருபர் 



...........................

Comments