தேனி பிப்.21-
தேனி மாவட்டம், போடி ஜமீன்தாரிணி காமுலம்மாள் நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி (ஜ.கா.நி.) மாணவ, மாணவியர்கள் தேனி-அரண்மனைப்புதூர் அருகே உள்ள வேதபுரீ சித்பவாநந்த ஆசிரமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஆலயத்திற்கு சிறப்பு தரிசனத்திற்கு சென்றனர். இந்தப் தரிசன பயணத்தில் 180 மாணவ, மாணவியர்களும், ஆசிரியர்களும் பங்கேற்றனர்.
ஆசிரம மேனேஜர் சுரேஷ் சிறப்பு தரிசனத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். கோவில் தலைமை குருக்கள் இரமேஷ் மாணவ, மாணவியர்களுக்கு ஸ்ரீ தட்சிணாமூர்த்தி வழிபாட்டு முறைகள், மனனம் செய்வது எப்படி என்பதையும், தேர்வுகளில் வெற்றி பெற உதவும் மந்திரங்களையும் விரிவாக விளக்கி கூறினார்.
இந்த அனுபவம், மாணவ, மாணவியர்களின் ஆன்மிக நம்பிக்கையை மேம்படுத்துவதுடன், கல்வியில் மேலும் சிறந்து விளங்கும் உறுதியையும் அளித்தது.
இந்நிகழ்வில் இந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைவர் இராமராஜ், மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் சுப்பையா, தேனி நகர தலைவர் சிவராம், நகர அமைப்பாளர் கனகுபாண்டி, நகர செயலாளர் அழகுபாண்டி, நகர துணைச் செயலாளர்கள் ஏழுமலையான் சுரேஷ் மற்றும் ராமகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் இ.பி மணிகண்டன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
நாகராஜ், முதன்மை நிருபர்
......................
Comments