Skip to main content

தேனி மாவட்ட கோர்ட்டில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு-ஆர்ப்பாட்டம்

தேனி, பிப்.21-

தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டுகோளின் படி தேனி வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர் வக்கீல் எம்.கே.எம் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். தேனி வழக்கறிஞர் சங்க தலைவர் செல்வன், கூட்டமைப்பு மாநில துணைத்தலைவர்கள் ராதாகிருஷ்ணன், வடிவேலன், மாநில துணைச்செயலாளர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தேனி வழக்கறிஞர் சங்க இணைச்செயலாளர் மல்லீஸ்வரன், மூத்த வக்கீல்கள் ஜெயபாரதி, காண்டீபன், பாலமுருகன் மற்றும் போடி கனி, வீரசிவா, கார்த்திக் உள்பட வழக்கறிஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

ஆர்ப்பாட்டத்தின் போது சேலம் வழக்கறிஞர்கள் தண்டபாணி, கவின் ஆகியோர் சேலம் நீதிமன்ற வளாகத்திலேயே கொலைவெறி தாக்குதலுடன் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவத்தை கண்டித்தும், வக்கீல்களுக்கு எதிராக வழக்கறிஞர் சட்ட திருத்தம் மசோதா 2025-ஐ மத்திய அரசு திரும்ப பெற கோரியும், வழக்கறிஞர் சேம நல நிதியை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்த்த வேண்டும். வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

நாகராஜ், முதன்மை நிருபர் 

...........................

Comments