தேனியில், இந்து எழுச்சி முன்னணி சார்பில் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு புகழஞ்சலி
தேனி, பிப்.14-
தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி சார்பில் கடந்த 2019 ஆண்டு புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படை வீரர்களின் நினைவாக, அவர்களுக்கு மரியாதை செலுத்தும் புகழஞ்சலி நிகழ்ச்சி தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் அருகே 14.2.2025 அன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தேனி மாவட்ட தலைவர் ராமராஜ், மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் இந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகள் வீர மரணம் அடைந்த பாதுகாப்பு படை வீரர்களின் நினைவாக மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, மலர் தூவி வீரவணக்கம் புகழஞ்சலி செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து இந்நிகழ்வின் போது மாவட்ட துணைத்தலைவர்கள் சோலைராஜன், ரமேஷ், விஷ்வா பில்டர்ஸ் பாலமுருகன், மாவட்ட துணைச்செயலாளர்கள் சக்திவேல், சுப்பையா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கம்பம் மணி பிரபு, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பாண்டியா பிள்ளை, தேனி நகர தலைவர் சிவராமன், நகர அமைப்பாளர் கனகுபாண்டி நகர பொருளாளர் நாகராஜ், நகர துணைத்தலைவர் சிவா, துணை செயலாளர் அழகுபாண்டி, நகரத் துணைச் செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ராம்குமார், சுரேஷ், பாலமுருகன், நகர செயற்குழு உறுப்பினர்கள் மணிகண்டன், சண்முகநாதன் உள்பட இந்து எழுச்சி முன்னணியினர் பலர் கலந்து கொண்டு வீரவணக்க அஞ்சலி செலுத்தினர்.
நாகராஜ், முதன்மை நிருபர்
........................
Comments