மத்திய அமைச்சர் அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க தேனி கலெக்டரிடம் கோரிக்கை மனு
தேனி, டிச.24-
தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் அண்ணல் DR.அம்பேத்கர் அவர்களின் புகழை பரப்புகின்ற வகையில் 24.12.2024 அன்று தேனி அரண்மணைப்புதூரில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கூடலூர் முருகேசன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு பேரணியாக அரண்மனைப்புதூர் முல்லைப்பெரியாறு ஆற்றுப்பாலம் வரை சென்று குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவரது புகழுக்கு களங்கம் ஏற்படுகின்ற வகையில் பாராளுமன்றத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் தேனி மாவட்ட துணைத்தலைவர் சன்னாசி, தேனி மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணவேணி சக்திவேல், போடி நகர தலைவர் முசாக் மந்திரி, தேனி நகர தலைவர் கோபிநாத், வட்டார தலைவர்கள் தேனி முருகன், பெரியகுளம் ஹம்சா முகமது, சின்னமனூர் ஜீவா, போடி ஜம்பு சுதாகர் மாநில பொதுக்குழு உறுப்பினர் முனியாண்டி, மாவட்ட செயலாளர் சம்சுதீன், மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு தலைவர் ராஜாமுகமது உள்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நாகராஜ், முதன்மை நிருபர்
...................
Comments