Skip to main content

க.புதுப்பட்டி பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம்

 

தேனி, டிச.23-

தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலப் பிரிவு அலுவலகம் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த கலந்தாய்வு கூட்டம் உத்தமபாளையம் தாலுகா, க.புதுப்பட்டி பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சுந்தரி பாஸ்கரன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் இளங்கோவன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பேரூராட்சி துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அலுவலர்கள்தொண்டு நிறுவன பிரதிநிதி சார்பாக சங்கமம் அறக்கட்டளை இயக்குனர் சுரேஷ் குமார், பேரூராட்சி மகளிர் கூட்டமைப்பு பிரதிநிதிகள், பேரூராட்சி செவிலியர் மற்றும் பணியாளர்கள, தூய்மை பணியாளர்கள், ஆசிரியர் பிரதிநிதி செந்தில்குமார் அரசு மேல்நிலைப்பள்ளி க.புதுப்பட்டி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்திலே தாய் தந்தையரை இழந்த குழந்தைகளுக்கு குழந்தைகள் நலத்துறை சார்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கிடைக்கக்கூடிய உதவிகள் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குழந்தை திருமண ஒழிப்பு முறைகள் போன்றவற்றினை அரசு வழங்கியுள்ள 1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவித்தால் ரகசியம் அவசியம் காக்கப்படும் என்ற தகவலோடு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் மூலம் கிடைக்கக்கூடிய நலத்திட்ட உதவிகளை பெற்றுத்தர மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் நலப் பிரிவு செயல்படும் என அந்த துறை அலுவலர் வனராஜா விளக்கமாக எடுத்து கூறினார். 


மேலும் பேரூராட்சி பகுதியில் இடைநிற்றல் குழந்தைகள், குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான விழிப்புணர்வுகள் மற்றும் பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்திய குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது சம்பந்தமாகவும் காப்பகத்தில் சேர்ப்பது சம்பந்தமாகவும் விளக்கமாக தேனி மாவட்ட குழந்தைகள் நலப் பிரிவு அலுவலக அலுவலர்  வனராஜா எடுத்துக் கூறினார்கள். முடிவில் பேரூராட்சி அலுவலர் நன்றி கூறினார்.

நாகராஜ், முதன்மை நிருபர்
....................

Comments