Skip to main content

தேனி மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிவசேனா கட்சியினர் லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனு

தேனி, டிச.23-

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம், தேனி ஆகிய தாலுகா பகுதிகளில் செயல்பட்டு வந்த 39 குவாரிகளில் அரசு அனுமதித்த அளவைவிட அளவுக்கு அதிகமான கற்கள், கிராவல் மண் கொள்ளையடிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் குவாரிகளின் உரிமையாளர்கள் 58 பேருக்கு ரூ.138 கோடி அபராதம் விதித்திருந்தார்

அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய குவாரிகள் தடை இன்றி தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் இது குறித்து கனிமவளத்துறை உதவி இயக்குனர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என தேனி மாவட்ட சிவசேனா கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து தேனி மாவட்ட சிவசேனா கட்சியின் மாநில துணைத்தலைவர் குரு அய்யப்பன் தலைமையில் மண்டல தலைவர் கருப்பையா, தேனி மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் மற்றும்  சிவசேனா கட்சியினர் லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளரிடம் புகார் மனுவை கொடுத்தனர்.

அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திய குவாரிகள் தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில் அதனை தடை செய்ய கனிமவளத்துறை ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பிய கட்சியினர் இது குறித்து கனிமவளத்துறை உதவி  இயக்குனர் கிருஷ்ணமோகனிடம் கேட்டபோது குவாரி உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறியதாக சிவசேனா கட்சியினர் தெரிவித்தனர் 
எனவே குவாரிகளின் உரிமையாளர்களுக்கும் கனிமவளத்துறை உதவி  இயக்குனருக்கும் தொடர்பு உள்ளதா என தேனி மாவட்ட கலெக்டர்  விசாரணை நடத்த வேண்டும் என்றும் வருவாய் இழப்பை ஏற்படுத்திய குவாரிகள் செயல்பட மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கையை தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது என்றும், ,கோடிக்கணக்கில் பணப்பரிமாற்றம் தொடர்பான புகார் என்பதால் தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை, காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது. 

மேலும் இந்த புகார் மனுவை ஏற்று கனிம வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் அவரது வீடுகள் , அவர் தொடர்புடைய உறவினர்கள் நண்பர்களுடைய வீடு எனஅனைத்து பகுதிகளிலும் உடனடியாக அதிரடி சோதனைகள் ஈடுபட்டு அவருடைய வங்கி கணக்குகள் அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்களின் வங்கி கணக்குகள் உள்ளிட்டவை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கூறியும் லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

நாகராஜ், முதன்மை நிருபர் 
......................



Comments