தேனி, டிச.22-
தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி மற்றும் வியாச வால்மீகி ஆதர்ஷ குருகுலம் சார்பில் 9-ம் ஆண்டு பாரத மாதா தேர் பவனி ஊர்வலம் தேனியில் 22.12.2024 அன்று நடைபெற்றது. ஊர்வலத்திற்கு இந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமை தாங்கினார். தேனி நகர தலைவர் சிவராமன் முன்னிலை வகித்தார்.
இந்து எழுச்சி முன்னணி நிறுவன தலைவர் பொன் ரவி, தேனி மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் வக்கீல் MKM.முத்துராமலிங்கம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
ஊர்வலத்திற்கு தேனி வேதபுரி சித்பவாநந்த ஆசிரமத்தின் பூஜ்ய ஸ்ரீ ஓங்காராநந்த மஹாசுவாமிகளின் சிஷ்யர் சுவாமி பூர்ணானந்த சரஸ்வதி சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்.
ஊர்வலத்தை தேனி போரஸ் குரூப்ஸ் அதிபர் மதளைராஜன் தொடங்கி வைத்தார்.
ஊர்வலத்தில் வெளிச்சம் அறக்கட்டளை நிர்வாகி சிதம்பரம், இந்து எழுச்சி முன்னணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் செந்தில் குமார், மாவட்ட துணைத்தலைவர் சோலை ராஜன் உள்பட இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர்கள், பெண்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தின் போது பாரத மாதா தேர் வானவேடிக்கை மற்றும் வண்ண நிற பேப்பர்கள் தூவி, மின்னொளியில் அழைத்து செல்லப்பட்டது. ஊர்வலம் தேனி அருகே உள்ள பொம்மையகவுண்டன்பட்டி சாலை பிள்ளையார் கோவில் முன்பு தொடங்கி தேனி வாரச்சந்தை பகுதியில் உள்ள கௌமாரியம்மன் கோவிலில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது. முடிவில் தேனி நகர பொது செயலாளர் முத்துராஜ் நன்றி கூறினார்.
நாகராஜ், முதன்மை நிருபர்
...................
Comments