தேனி, டிச. 22-
தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் அம்பேத்கரை இழிவு படுத்தியும், ராகுல் காந்தி மீது பொய் வழக்கு போடும் மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் போடி வள்ளுவர் சிலை முன்பு 21.12.2024 அன்று நடைபெற்றது. தேனி மாவட்ட தலைவர் கூடலூர் முருகேசன் தலைமை தாங்கினார். போடி நகர தலைவர் முசாக் மந்திரி, மாவட்ட துணைத்தலைவர் சன்னாசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்பாட்டத்தில் மேலிட தேர்தல் பார்வையாளர்கள் செல்வராஜ் பாண்டியன். சிலுவை.தனுஷ் கோடி.மற்றும் நகர பொதுச்செயலாளர் அரசகுமார்.மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் முனியாண்டி. சின்னபாண்டி, SC.ST.மாவட்ட தலைவர் இனியவன், மாநில செயலாளர் முத்து ராம். முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் முகமது ரசூல், மகிளா காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவி சிவகாமி சுந்தரி மற்றும் சரஸ்வதி. காந்தி, ஏலம் கனகராஜ் காளிமுத்து மற்றும் காங்கிரசார் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய பாஜக அரசசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். முடிவில் நகர செயலாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
நாகராஜ், முதன்மை நிருபர்
......................
Comments