Skip to main content

தேனியில் ஸ்ரீ திருமலை திருப்பதி சேவை சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்

தேனி, டிச.16-
தேனி அல்லிநகரத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ திருமலை திருப்பதி சேவை சங்கம் சார்பில் 2-ம் ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தேனியில் உள்ள வசந்த மஹாலில் 15.12.2024 அன்று நடைபெற்றது.  விழாவிற்கு சங்க தலைவர் சசிகுமார் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் மாரீஸ்வரன், பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழா குழு ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் வரவேற்றார்.
விழாவில் தொழிலதிபர் தெய்வா பால்பாண்டி, லயன்ஸ் கிளப் முன்னாள் மண்டல தலைவர் கண்ணன், வெளிச்சம் அறக்கட்டளை நிர்வாகி, சமூக ஆர்வலர் சிதம்பரம், அல்லிநகரம் கிராம நிர்வாக கமிட்டி தலைவர் நாகராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு  ஊக்க  தொகை மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினர். 
இதனைத்தொடர்ந்து வடபுதுபட்டியில் உள்ள அன்பு முதியோர் இல்ல ஆசிரமத்திற்கும் மற்றும்  பழனிசெட்டிபட்டியில் உள்ள பாராகிளிட் ஆதரவற்றோர் அன்பின் இல்லத்திற்கும் தலா ரூ.10 ஆயிரம் காசோலை மற்றும் அரிசி மூடையும், 36 ஏழை பெண்களுக்கு இலவச சேலைகளும் வழங்கினர். அதுபோல ஸ்ரீ திருமலை திருப்பதி சேவை சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் இலவச காப்பீடு பாலிசி மற்றும் பரிசு பொருள்களும் வழங்கப்பட்டது.
விழாவில் அல்லிநகரம் கிராம கமிட்டி செயலாளர் தாமோதரன், பனசலாறு அருள் முருகன் தைப்பூச விழா அன்னதான குழு தலைவர் வீரமணி, ஆலோசகர் பாலகுரு, நகர முக்கிய பிரமுகர் ரெங்கநாதன் உள்பட சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். விழா நிகழ்ச்சியினை திவ்யா  தொகுத்து வழங்கினார். முடிவில் அமுதகாந்தன் நன்றி கூறினார்.

நாகராஜ், முதன்மை நிருபர் 




Comments