தேனி மாவட்டம், கைலாசநாதர் மலைக்கோவிலில் 500 கிலோ நெய் ஊற்றி மகா கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கார்த்திகை தீப வழிபாடு செய்தார்
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி பகுதியில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் அருள்மிகு பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் திருக்கோவில் மலை மேல் அமைந்துள்ளது.
இக்கோவில் ஆனது திருவண்ணாமலைக்கு அடுத்தபடியாக மலையை சுற்றி கிரிவலப் பாதையுடன் அமைந்துள்ளதால் இந்த கோவிலானது தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு 13.12.2024 அன்று கோவில் மகா கார்த்திகை தீப திருவிழா நடைபெற்றது. முன்னதாக கைலாசபட்டி கிராமத்தினர் கிராம மக்கள் சார்பாக பாலா தீபம் மற்றும் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தீப விழாவை முன்னிட்டு கைலாசநாதர் சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதன் பின்னர் கைலாசநாதர் கோவில் ராஜா பட்டர் மகா கார்த்திகை தீபத்தை ஏற்றி வைத்தார். தீபம் ஏற்றிய போது கூடியிருந்த பக்தர்கள் கொம்பு ஊதி, சிவ வாத்தியங்களை முழங்கி வழிபட்டனர். இதனைத்தொடர்ந்து சொக்கப்பனை கொழுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு கைலாசநாதர் கோவிலில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்களுடன் வந்து கார்த்திகை தீபத்தை வணங்கி கோவில் வளாகத்தை சுற்றி கைலாசநாதரை வழிபாடு செய்தார்.
நாகராஜ், முதன்மை நிருபர்
Comments