தேனி, டிச.14-
தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, கைலாசபட்டி, கைலாசநாதர் கோவில் அடிவாரம் கிரிவல பாதையில் ஸ்ரீ ஜி.ஜி.ல அல்சித் பாபாஜி சேவாஸ்ரமம் அமைந்துள்ளது. இந்த ஆசிரம வளாகத்தில் திருக்கார்த்திகை மகாதீப விழா 13.12.2024 அன்று நடைபெற்றது. தீப விழாவை முன்னிட்டு மாலை சிறப்பு பூஜைகள் செய்து கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.
அதனைத்தொடர்ந்து ஆசிரமம் வளாக பகுதி முழுவதும் நெய் விளக்குகள் ஏற்றப்பட்டது.
இந்நிகழ்வில் உலக சந்நியாசிகள் சங்க தலைவர் ஒகேனக்கல் ராமானந்தா ஜி மற்றும் நிலையூர் ஆதீனம் மற்றும் சிவனடியார்கள், ஆசிரமம் நிர்வாகிகள் மற்றும் ஆசிரம சேவாதாரர்கள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.
நாகராஜ், முதன்மை நிருபர்
Comments