தேனி, டிச.31- தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தேனி கிழக்கு மாவட்டம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 30.12.2024 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் மள்ளர் பாலா, மாவட்ட தலைவர் வேந்தர் பாலா ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் கழக நிர்வாகிகள் 50-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது ஆண்டிப்பட்டி அருகே கண்டமனூரில் நீர் நிலைகள் மற்றும் குளங்களை ஆக்கிரமித்து சுமார் 9-க்கும் மேற்பட்ட உயர் மின்னழுத்த கோபுரங்களை அமைத்துள்ளனர் இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரியும், தேனி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கனிமவள கொள்ளைகளை தடுத்து நிறுத்தி, பாறைகளில் அளவுக்கு அதிகமாக வெடிகளை வைத்து தகர்த்து எடுப்பதால் விவசாய நிலங்கள் பாதிப்புக்கு உள்ளாகுவதை தடுக்க கோரியும், தேனி மாவட்டத்தில் இருந்து கனிம வளங்களை கேரளாவிற்கு கொள்ளையடித்து செல்வதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் தேனி மாவட்டத்தில் உள்ள பஞ்சமர் நிலங்களை மீட்டெடுத்து நிலம் இல்லாத ஏழை விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும் என்பன உள...
Publisher of the Website : Nagaraj Kamudurai