Skip to main content

Posts

Showing posts from December, 2024

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

தேனி, டிச.31- தேனி மாவட்ட கலெக்டர்  அலுவலகம் முன்பு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தேனி கிழக்கு மாவட்டம் சார்பில் பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி 30.12.2024 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் மள்ளர் பாலா, மாவட்ட தலைவர் வேந்தர் பாலா ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் கழக நிர்வாகிகள் 50-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது ஆண்டிப்பட்டி அருகே கண்டமனூரில் நீர் நிலைகள் மற்றும் குளங்களை ஆக்கிரமித்து சுமார் 9-க்கும் மேற்பட்ட உயர் மின்னழுத்த கோபுரங்களை அமைத்துள்ளனர் இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரியும், தேனி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கனிமவள கொள்ளைகளை தடுத்து நிறுத்தி, பாறைகளில் அளவுக்கு அதிகமாக வெடிகளை வைத்து தகர்த்து எடுப்பதால் விவசாய நிலங்கள் பாதிப்புக்கு உள்ளாகுவதை தடுக்க கோரியும், தேனி மாவட்டத்தில் இருந்து கனிம வளங்களை கேரளாவிற்கு கொள்ளையடித்து செல்வதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும்  தேனி மாவட்டத்தில் உள்ள பஞ்சமர் நிலங்களை மீட்டெடுத்து நிலம் இல்லாத ஏழை விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும் என்பன உள...

மத்திய அமைச்சர் அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க தேனி கலெக்டரிடம் கோரிக்கை மனு

தேனி, டிச.24- தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் அண்ணல் DR.அம்பேத்கர் அவர்களின் புகழை பரப்புகின்ற வகையில் 24.12.2024 அன்று தேனி அரண்மணைப்புதூரில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கூடலூர் முருகேசன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு பேரணியாக அரண்மனைப்புதூர் முல்லைப்பெரியாறு ஆற்றுப்பாலம் வரை சென்று குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவரது புகழுக்கு களங்கம் ஏற்படுகின்ற வகையில் பாராளுமன்றத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் தேனி மாவட்ட துணைத்தலைவர் சன்னாசி, தேனி மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணவேணி சக்திவேல், போடி நகர தலைவர் முசாக் மந்திரி, தேனி நகர தலைவர் கோபிநாத், வட்டார தலைவர்கள் தேனி முருகன், பெரியகுளம் ஹம்சா முகமது, சின்னமனூர் ஜீவா, போடி ஜம்பு சுதாகர் மாநில பொதுக்குழு உறுப்பினர் முனியாண்டி, மாவட்ட செயலாளர் சம்சுதீன், மாவட்ட சிறுபான...

ஆண்டிபட்டி வட்டார நூலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சி மொழி சட்ட விளக்க கூட்டம்

  தேனி, டிச.23- தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் உள்ள வட்டார நூலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சி மொழி சட்ட விளக்க கூட்டம் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் பெ.இளங்கோ தலைமையில் நடைபெற்றது.மூத்த பத்திரிக்கையாளர் கவிஞர் சசிதுரை வரவேற்றார். முன்னாள் தேனி மைய நூலகர் சந்திரசேகர் அவர் அனுபவத்தைப் பகிர்ந்து வாழ்த்துரை வழங்கினார். தேனி பொன்முடி தமிழின் முக்கியத்துவத்தை பேசி கேட்டவர்களை கொஞ்ச நேரம் கட்டிப்போட்டுவிட்டார். நூலகர் கவிதா மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர். கருத்துரையினை தேனி (நாகலாபுரம்) வையைத் தமிழ்ச்சங்க நிறுவனர் புலவர் ச.ந இளங்குமரன்  கருத்தாழமுள்ள தமிழை சங்கால புறநானூரை மேற்கோள் காட்டி பேசினார். அவரது பேச்சில் முதிர்ச்சியும் எழுச்சியும் இருந்ததால் நூலகத்திற்கு அரசுத் தேர்வுக்கு படிக்க வந்திருந்த இளைஞர்கள் ஆர்வத்துடன் கேட்டு பயன் பெற்றனர்.  கூட்ட நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் பெ இளங்கோ அவர்கள் தலைமை உரையாற்றினார் அப்போது மாணவர்களாகிய நீங்கள் தான் நாளைய நாட்டை வழிநடத்த கூடியவர்கள்.உங்கள் காதுகளில் ஒரு விசயத்தை போட்டு வைத்தால் தான் நாளைக்கு வேர்...

க.புதுப்பட்டி பேரூராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம்

  தேனி, டிச.23- தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலப் பிரிவு அலுவலகம் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த கலந்தாய்வு கூட்டம் உத்தமபாளையம் தாலுகா, க.புதுப்பட்டி பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சுந்தரி பாஸ்கரன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பேரூராட்சி துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அலுவலர்கள் தொண்டு நிறுவன பிரதிநிதி சார்பாக  சங்கமம் அறக்கட்டளை இயக்குனர்  சுரேஷ் குமார், பேரூராட்சி மகளிர் கூட்டமைப்பு பிரதிநிதிகள், பேரூராட்சி செவிலியர் மற்றும் பணியாளர்கள,  தூய்மை பணியாளர்கள், ஆசிரியர் பிரதிநிதி செந்தில்குமார் அரசு மேல்நிலைப்பள்ளி க.புதுப்பட்டி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.  இந்த கூட்டத்திலே தாய் தந்தையரை இழந்த குழந்தைகளுக்கு குழந்தைகள் நலத்துறை சார்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கிடைக்கக்கூடிய உதவிகள் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குழந்தை திருமண ஒழிப்பு முறைகள் போன்றவற்றினை அரசு வழங்கிய...

தேனி மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிவசேனா கட்சியினர் லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனு

தேனி, டிச.23- தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம், தேனி ஆகிய தாலுகா பகுதிகளில் செயல்பட்டு வந்த 39 குவாரிகளில் அரசு அனுமதித்த அளவைவிட அளவுக்கு அதிகமான கற்கள், கிராவல் மண் கொள்ளையடிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் குவாரிகளின் உரிமையாளர்கள் 58 பேருக்கு ரூ.138 கோடி அபராதம் விதித்திருந்தார் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய குவாரிகள் தடை இன்றி தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் இது குறித்து கனிமவளத்துறை உதவி இயக்குனர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என தேனி மாவட்ட சிவசேனா கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து தேனி மாவட்ட சிவசேனா கட்சியின் மாநில துணைத்தலைவர் குரு அய்யப்பன் தலைமையில் மண்டல தலைவர் கருப்பையா, தேனி மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் மற்றும்  சிவசேனா கட்சியினர் லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளரிடம் புகார் மனுவை கொடுத்தனர். அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திய குவாரிகள் தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில் அதனை தடை செய்ய கனிமவளத்துறை ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பிய கட்சியினர் இது குறித்து கனிமவளத்துறை உதவ...

தேனியில், இந்து எழுச்சி முன்னணி சார்பில் பாரத மாதா தேர் பவனி

தேனி, டிச.22- தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி மற்றும் வியாச வால்மீகி ஆதர்ஷ குருகுலம் சார்பில் 9-ம் ஆண்டு பாரத மாதா தேர் பவனி ஊர்வலம் தேனியில் 22.12.2024 அன்று நடைபெற்றது. ஊர்வலத்திற்கு இந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமை தாங்கினார். தேனி நகர தலைவர் சிவராமன் முன்னிலை வகித்தார். இந்து எழுச்சி முன்னணி நிறுவன தலைவர் பொன் ரவி, தேனி மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் வக்கீல் MKM.முத்துராமலிங்கம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.  ஊர்வலத்திற்கு தேனி வேதபுரி சித்பவாநந்த ஆசிரமத்தின் பூஜ்ய ஸ்ரீ ஓங்காராநந்த மஹாசுவாமிகளின் சிஷ்யர் சுவாமி பூர்ணானந்த சரஸ்வதி சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். ஊர்வலத்தை தேனி போரஸ் குரூப்ஸ் அதிபர் மதளைராஜன் தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் வெளிச்சம் அறக்கட்டளை நிர்வாகி சிதம்பரம், இந்து எழுச்சி முன்னணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் செந்தில் குமார், மாவட்ட துணைத்தலைவர் சோலை ராஜன் உள்பட இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர்கள், பெண்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  ஊர்வலத்தின் போது பாரத மாதா தேர் வானவேடி...

போடியில் மத்திய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தேனி, டிச. 22- தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் அம்பேத்கரை இழிவு படுத்தியும், ராகுல் காந்தி மீது பொய் வழக்கு போடும் மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் போடி வள்ளுவர் சிலை முன்பு 21.12.2024 அன்று நடைபெற்றது. தேனி மாவட்ட தலைவர் கூடலூர் முருகேசன் தலைமை தாங்கினார். போடி நகர தலைவர் முசாக் மந்திரி, மாவட்ட துணைத்தலைவர் சன்னாசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்பாட்டத்தில் மேலிட தேர்தல் பார்வையாளர்கள் செல்வராஜ் பாண்டியன். சிலுவை.தனுஷ் கோடி.மற்றும் நகர பொதுச்செயலாளர் அரசகுமார்.மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் முனியாண்டி. சின்னபாண்டி, SC.ST.மாவட்ட தலைவர் இனியவன், மாநில செயலாளர் முத்து ராம். முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் முகமது ரசூல், மகிளா காங்கிரஸ்  மாவட்ட துணைத்தலைவி சிவகாமி சுந்தரி மற்றும் சரஸ்வதி. காந்தி,  ஏலம் கனகராஜ் காளிமுத்து  மற்றும் காங்கிரசார் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய பாஜக அரசசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். முடிவில் நகர செயலாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார். நாகராஜ், முதன்மை நிருபர்  ......................

தேனி மாவட்டத்தில் முறைகேடாக கனிமங்களை வெட்டி எடுத்த 39 குவாரிகளுக்கு ரூ.138 கோடி அபராதம்: குவாரிகளை தடை செய்ய கோரி சிவசேனா கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு

தேனி, டிச.20- சிவசேனா கட்சியின் சார்பில் மாநில துணைத்தலைவர் குரு. அய்யப்பன் தலைமையில்  தேனி-மதுரை மண்டல தலைவர் கருப்பையா, தேனி மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் முருகவேல் உள்பட கட்சி நிர்வாகிகள் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமாதவனிடம் 19.12.2024 அன்று கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது,  தேனி மாவட்டம், பெரியகுளம் வருவாய் கோட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி, தேனி, பெரியகுளம் ஆகிய தாலுகா பகுதிகளில் செயல்படும் தனியார், அரசு நிலங்களில் உள்ள குவாரிகளில் கனிமவள கொள்ளை நடப்பதாக கடந்த 2020-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தனி நபர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தேனி மாவட்ட நிர்வாகம், கனிமவளத்துறை உதவி இயக்குனருக்கு உத்தரவிட்டது. அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு பெரியகுளம் வருவாய் கோட்டத்தில் ஆண்டிப்பட்டி, தேனி, பெரியகுளம் ஆகிய தாலுகாவில் உள்ள குவாரிகளில் ட்ரோன் கேமரா மூலம் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஆய்வுகள் மேற்கொள்...

தேனியில் ஸ்ரீ திருமலை திருப்பதி சேவை சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்

தேனி, டிச.16- தேனி அல்லிநகரத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ திருமலை திருப்பதி சேவை சங்கம் சார்பில் 2-ம் ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தேனியில் உள்ள வசந்த மஹாலில் 15.12.2024 அன்று நடைபெற்றது.  விழாவிற்கு சங்க தலைவர் சசிகுமார் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் மாரீஸ்வரன், பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழா குழு ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் வரவேற்றார். விழாவில் தொழிலதிபர் தெய்வா பால்பாண்டி, லயன்ஸ் கிளப் முன்னாள் மண்டல தலைவர் கண்ணன், வெளிச்சம் அறக்கட்டளை நிர்வாகி, சமூக ஆர்வலர் சிதம்பரம், அல்லிநகரம் கிராம நிர்வாக கமிட்டி தலைவர் நாகராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு  ஊக்க  தொகை மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினர்.  இதனைத்தொடர்ந்து வடபுதுபட்டியில் உள்ள அன்பு முதியோர் இல்ல ஆசிரமத்திற்கும் மற்றும்  பழனிசெட்டிபட்டியில் உள்ள பாராகிளிட் ஆதரவற்றோர் அன்பின் இல்லத்திற்கும் தலா ரூ.10 ஆயிரம் காசோலை மற்றும் அரிசி மூடையும், 36 ஏழை பெண்களுக்கு இலவச சேலைகள...

தேனி அல்லிநகரம் வீரப்ப அய்யனார் மலைக்கோவிலில் தைப்பூச விழா அன்னதானக்குழு சார்பில் சிறப்பு பூஜை

தேனி, டிச.14- தேனி அல்லிநகரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வீரப்ப அய்யனார் மலைக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்தில் உள்ள பனசலாறு அருள்முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவை அல்லிநகரம் தைப்பூச அன்னதான குழுவினர் நடத்தி வருகின்றனர்.  இந்த தைப்பூச அன்னதானக்குழு சார்பில் வருகின்ற 11.2.2025 செவ்வாய்க்கிழமை அன்று 46-ம் ஆண்டு தைப்பூச விழா கொண்டாடப்பட்டு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.  இந்த விழாவிற்கான 46-ம் ஆண்டு  புதுக்கணக்கு தொடங்கும் நிகழ்வு 14.12.2024 அன்று வீரப்ப அய்யனார் மலைக்கோயிலில் சிறப்பு பூஜை செய்து தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தைப்பூச அன்னதான குழு தலைவர் வீரமணி, செயலாளர் கண்ணன், பொருளாளர் ராஜு, துணைத்தலைவர் சின்னையன், துணைச் செயலாளர் சின்னப்பா, ஆலோசகர் பாலகுரு, தைப்பூச அன்னதானக்குழு உறுப்பினர்கள் கோவிந்தராஜ் பூசாரி, ராஜுப்பிள்ளை, முன்னாள் கவுன்சிலர் கோவிந்தராஜ், ஓய்வு பெற்ற எஸ்.ஐ., தனசேகரன் புரோகிதர் கோபால்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.  முடிவில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது...

தேனி மாவட்டம், கைலாசநாதர் மலைக்கோவிலில் 500 கிலோ நெய் ஊற்றி மகா கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கார்த்திகை தீப வழிபாடு செய்தார்

தேனி, டிச.14- தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி பகுதியில் இந்து சமய  அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் அருள்மிகு பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் திருக்கோவில் மலை மேல் அமைந்துள்ளது.  இக்கோவில்  ஆனது திருவண்ணாமலைக்கு அடுத்தபடியாக மலையை சுற்றி கிரிவலப் பாதையுடன் அமைந்துள்ளதால்  இந்த கோவிலானது தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.  கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு 13.12.2024 அன்று கோவில் மகா கார்த்திகை தீப திருவிழா நடைபெற்றது. முன்னதாக கைலாசபட்டி கிராமத்தினர்  கிராம மக்கள் சார்பாக பாலா தீபம் மற்றும் பரணி தீபம் ஏற்றப்பட்டது.  இதனைத்தொடர்ந்து தீப விழாவை முன்னிட்டு கைலாசநாதர் சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதன் பின்னர் கைலாசநாதர் கோவில் ராஜா பட்டர் மகா கார்த்திகை தீபத்தை ஏற்றி வைத்தார். தீபம் ஏற்றிய போது கூடியிருந்த பக்தர்கள் கொம்பு ஊதி, சிவ வாத்தியங்களை முழங்கி  வழிபட்டனர். இதனைத்தொடர்ந்து சொக்கப்பனை கொழுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.   இந்த கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு கைலாசநாதர் கோவிலில் முன்னாள் முத...

பெரியகுளம் அருகே, கைலாசபட்டி பாபாஜி சேவாஸ்ரமத்தில் கார்த்திகை மகா தீபம்

தேனி, டிச.14- தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, கைலாசபட்டி, கைலாசநாதர் கோவில் அடிவாரம் கிரிவல பாதையில் ஸ்ரீ ஜி.ஜி.ல அல்சித் பாபாஜி சேவாஸ்ரமம் அமைந்துள்ளது. இந்த ஆசிரம வளாகத்தில் திருக்கார்த்திகை மகாதீப விழா 13.12.2024 அன்று நடைபெற்றது. தீப விழாவை முன்னிட்டு மாலை சிறப்பு பூஜைகள் செய்து கார்த்திகை மகா தீபம்  ஏற்றப்பட்டது.  அதனைத்தொடர்ந்து ஆசிரமம் வளாக பகுதி முழுவதும் நெய் விளக்குகள் ஏற்றப்பட்டது.  இந்நிகழ்வில் உலக சந்நியாசிகள் சங்க தலைவர் ஒகேனக்கல் ராமானந்தா ஜி மற்றும் நிலையூர் ஆதீனம் மற்றும் சிவனடியார்கள், ஆசிரமம் நிர்வாகிகள் மற்றும் ஆசிரம சேவாதாரர்கள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.  நாகராஜ், முதன்மை நிருபர் 

தேனியில் டிடிவி தினகரன் பிறந்தநாள் விழா: அமமுக-வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தேனி, டிச.13- அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பிறந்த நாள் விழா தேனி நகர வடக்கு மற்றும் தெற்கு அ.ம.மு.க சார்பில் 13.12.2024 அன்று கொண்டாடப்பட்டது.  விழாவிற்கு தேனி வடக்கு நகர செயலாளர் குருகணேஷ் தலைமை தாங்கினார்.  தேனி தெற்கு நகர செயலாளர் விஜயராஜன் முன்னிலை வகித்தார். விழாவில் தேனி அமமுக வடக்கு மாவட்ட செயலாளர் காசிமாயன்,  அமமுக அமைப்பு செயலாளர் டாக்டர். கதிர்காமு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். விழாவின் போது தேனி பெத்தாட்சி விநாயகர் கோவிலில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பெயரில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமமுக நிர்வாகிகள் கோவிந்தராஜ், முருகன், ஜோல்ஜர் அகாடமி சின்னச்சாமி உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். நாகராஜ், முதன்மை நிருபர்