Skip to main content

ஆண்டிபட்டி வட்டார நூலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சி மொழி சட்ட விளக்க கூட்டம்

 

தேனி, டிச.23-

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் உள்ள வட்டார நூலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சி மொழி சட்ட விளக்க கூட்டம் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் பெ.இளங்கோ தலைமையில் நடைபெற்றது.மூத்த பத்திரிக்கையாளர் கவிஞர் சசிதுரை வரவேற்றார். முன்னாள் தேனி மைய நூலகர் சந்திரசேகர் அவர் அனுபவத்தைப் பகிர்ந்து வாழ்த்துரை வழங்கினார். தேனி பொன்முடி தமிழின் முக்கியத்துவத்தை பேசி கேட்டவர்களை கொஞ்ச நேரம் கட்டிப்போட்டுவிட்டார். நூலகர் கவிதா மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர்.

கருத்துரையினை தேனி (நாகலாபுரம்) வையைத் தமிழ்ச்சங்க நிறுவனர் புலவர் ச.ந இளங்குமரன்  கருத்தாழமுள்ள தமிழை சங்கால புறநானூரை மேற்கோள் காட்டி பேசினார். அவரது பேச்சில் முதிர்ச்சியும் எழுச்சியும் இருந்ததால் நூலகத்திற்கு அரசுத் தேர்வுக்கு படிக்க வந்திருந்த இளைஞர்கள் ஆர்வத்துடன் கேட்டு பயன் பெற்றனர். 

கூட்ட நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் பெ இளங்கோ அவர்கள் தலைமை உரையாற்றினார் அப்போது மாணவர்களாகிய நீங்கள் தான் நாளைய நாட்டை வழிநடத்த கூடியவர்கள்.உங்கள் காதுகளில் ஒரு விசயத்தை போட்டு வைத்தால் தான் நாளைக்கு வேர்விட்டு செடியாகி மரமாகி பூ  பூத்து தமிழ் மொழியை  கனியாக அறுவடை செய்ய முடியும். ஆகவே தமிழுக்கு குந்தகம் விளைவிப்பவர்களை தட்டிக்கேளுங்கள். ஒருவர் மாறினால்  ஊர்மாற்றம் அடையும் ஊர் மாறினால் தான் நாடுமாறும் என்று பேசினார்.

கூட்டத்தில் பட்டிமன்ற நடுவர் வி.வி. இளங்கோவன், முன்னாள் யூனியன் ஆணையாளர் கோவிந்தராஜ்.மற்றும் பலர் கலந்து கொள்ள உமா நாராயணன் பதிப்பகம் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியின் மூலம் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது குறித்து விழிப்புணர்வு உரை நிகழ்த்தப்பட்டது..முடிவில் வாசகர் வட்ட தலைவர் மீனாட்சி கந்தரம் நன்றி கூறினார்.

சசிதுரை, சிறப்பு நிருபர் 
.....................

Comments