Skip to main content

தேனி அல்லிநகரம் வீரப்ப அய்யனார் மலைக்கோவிலில் தைப்பூச விழா அன்னதானக்குழு சார்பில் சிறப்பு பூஜை

தேனி, டிச.14-

தேனி அல்லிநகரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வீரப்ப அய்யனார் மலைக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்தில் உள்ள பனசலாறு அருள்முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவை அல்லிநகரம் தைப்பூச அன்னதான குழுவினர் நடத்தி வருகின்றனர். 
இந்த தைப்பூச அன்னதானக்குழு சார்பில் வருகின்ற 11.2.2025 செவ்வாய்க்கிழமை அன்று 46-ம் ஆண்டு தைப்பூச விழா கொண்டாடப்பட்டு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. 


இந்த விழாவிற்கான 46-ம் ஆண்டு  புதுக்கணக்கு தொடங்கும் நிகழ்வு 14.12.2024 அன்று வீரப்ப அய்யனார் மலைக்கோயிலில் சிறப்பு பூஜை செய்து தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தைப்பூச அன்னதான குழு தலைவர் வீரமணி, செயலாளர் கண்ணன், பொருளாளர் ராஜு, துணைத்தலைவர் சின்னையன், துணைச் செயலாளர் சின்னப்பா, ஆலோசகர் பாலகுரு, தைப்பூச அன்னதானக்குழு உறுப்பினர்கள் கோவிந்தராஜ் பூசாரி, ராஜுப்பிள்ளை, முன்னாள் கவுன்சிலர் கோவிந்தராஜ், ஓய்வு பெற்ற எஸ்.ஐ., தனசேகரன் புரோகிதர் கோபால்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
முடிவில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

நாகராஜ், முதன்மை நிருபர் 

Comments