Skip to main content

போடியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒற்றுமை பாதயாத்திரை

தேனி, அக்.8-

தேனி மாவட்டம், போடி நகர மற்றும் வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு ஒற்றுமை பாதயாத்திரை போடியில் 7.10..2024 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு போடி நகர காங்கிரஸ் தலைவர் முசாக் மந்திரி, போடி வட்டார காங்கிரஸ் தலைவர் ஜம்பு சுதாகர் ஆகியோர் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் சன்னாசி, மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணவேணி சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
நிகழ்ச்சியில் தேனி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கூடலூர் முருகேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஒற்றுமை பாதயாத்திரையின் நோக்கங்கள் குறித்து விளக்கி பேசினார். 
நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் முனியாண்டி, தேனி வட்டார தலைவர் முருகன், பெரியகுளம் வட்டார தலைவர் ஹம்சா முகமது, சின்னமனூர் வட்டார தலைவர் ஜீவா, காங்கிரஸ் எஸ்.சி.,. எஸ்.டி., துறை மாவட்ட தலைவர் இனியவன் உள்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பாதயாத்திரையின் போது காந்திய சிந்தனைகளை பின்பற்ற வேண்டும் என்பன குறித்து வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி கொண்டே சென்றனர்.

நாகராஜ், முதன்மை நிருபர் 


Comments