Skip to main content

நாடார் சரசுவதி கலை கல்லூரியில், பள்ளி மாணவிகளுக்கான கல்லூரி சாலை-2024 கலை நிகழ்வுகள்

தேனி, அக்.10-

தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கல்லூரி சாலை-2024 கலை நிகழ்வுகளின் களம் 9.10.2024 அன்று கர்மவீரர் காமராஜர் கலையரங்கில் (K3)  நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார்.
கல்லூரி முதல்வர் முனைவர் சித்ரா வரவேற்றார்.
நிகழ்வில் கல்லூரி செயலாளர் காசிபிரபு வாழ்த்துரை வழங்கி பேசுகையில், நீங்கள் வாழ்வின் மிக முக்கியமான திருப்பத்தில் இருக்கிறீர்கள். 
பிளஸ்-2 என்பது வெறும் கல்வியின் முடிவல்ல. உங்கள் கனவுகளுக்கு புதிய வாயிலாகும். கற்றல் என்பது ஒருபோதும் முடிவடையாத ஓர் பயணம். ஆர்வத்தையும் இழக்காமல், ஒவ்வொரு நாளும் கற்றலில் ஈடுபடுங்கள். உற்சாகத்தையும்,

கற்றல் என்பது வெறும் புத்தக அறிவில் மட்டும் நின்றுவிடக் கூடாது. நீங்கள் கற்றுக்கொள்கிற ஒவ்வொரு விஷயத்தையும் அனுபவத்தில் மாற்றுங்கள். அதை செயல்படுத்துங்கள்.
நம் நாட்டின் எதிர்காலம் உங்கள் கைகளில் தான் இருக்கிறது. நீங்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்தையும் சாதனையாக்க முடியும்.
நம்பிக்கையுடன் தொடங்குங்கள். வாழ்வில் எதைச் சாதிக்க நினைத்தாலும், முதலில் உங்களை நம்ப வேண்டும். "நான் இதை முடிக்க முடியும்" என்ற நம்பிக்கை உங்கள் உழைப்பின் அடிப்படையாக அமையும்.

இப்போது நீங்கள் சந்திக்கும் பாடப் பிரச்சனைகள், தேர்வுகளின் அழுத்தம் அனைத்தும் தற்காலிகம், தேர்வுகள் என்பது வெற்றியின் ஒரு படிக்கல் மட்டுமே. அதனால், தேர்வுகளை உங்கள் வாழ்க்கையின் முடிவு என்று கருத வேண்டாம். மாறாக, அவற்றை உங்கள் வளர்ச்சிக்கு ஒரு சவால் என்று பாருங்கள். கடின உழைப்பு. புது விஷயங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம், மற்றும் விடாமுயற்சியே உங்களை வெற்றிக்குத் தூண்டும்.
வாழ்க்கையில் எதை அடைய வேண்டும் என்றாலும், சுய ஒழுக்கம் மிக முக்கியம். தனிப்பட்ட முறையில் உங்கள் நேரத்தைப் பராமரிக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் கனவுகளை அடைய உழைப்பதில் சுய ஒழுக்கமும், பொறுமையும் மிக அவசியம். சிறந்த பழக்கங்களை உருவாக்குங்கள், அவை உங்களை வெற்றிப்பாதையில் கொண்டுசெல்லும்.
"நம்பிக்கை மற்றும் உழைப்பு" இது வெற்றியின் இரு முக்கிய அம்சங்கள். எதிலும் மனதளவிலும், அன்பும், ஆர்வமும் கொண்டு முன்பணியுங்கள்.

உங்கள் பிளஸ்-2 பயணம் முடிவடையும் தருணத்தில், எந்தக் கல்லூரி சரியானது என்பதை தேர்வு செய்யும் முன், முதலில் நீங்கள் ஏன் இந்தக் கல்லூரியில் சேர வேண்டுமென கேளுங்கள். உங்கள் ஆர்வங்கள், திறன்கள், மற்றும் எதிர்கால இலக்குகள் எந்த துறையில் இருக்கின்றன என்பதையும் அவற்றை அடைய உதவும் கல்லூரி எது என்பதையும் ஆராயுங்கள்.
கல்லூரியின் இருப்பிடம் முக்கியம். நீங்கள் உங்கள் ஆர்வங்களுக்கும், வாழ்க்கை முறைக்கும் ஏற்ப இடவசதியுள்ள கல்லூரியை தேர்வு செய்ய வேண்டும். கல்லூரி வளாகம். மாணவர் வசதி, மற்றும் பாதுகாப்பு போன்றவற்றும் கவனத்தில் கொள்ள வேண்டியவை.
நல்ல கல்லூரி என்பது அறிவியல், தொழில்நுட்பம் மட்டுமல்ல அது பொது திறன்களை தொழில்முறை திறன்களை, மற்றும் விளையாட்டுகளை போன்றவற்றையும் ஊக்குவிக்க வேண்டும். 

இது உங்களது தனிப்பட்ட வளர்ச்சியிலும், உழைப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை அனைத்தையும் பார்த்து, நீங்கள் எடுத்துக் கொள்ளும் முடிவு உங்கள் வாழ்வின் புதிய பாதையை அமைக்க உதவும். இதனால் துடிப்பாகவும் ஆர்வமாகவும் இருங்கள். உங்களின் கனவுகளை நனவாக்க, சரியான கல்லூரியைத் தேர்வு செய்வது முதல் படியாக இருக்கும்.என்று பேசினார்.
இந்த கல்லூரி சாலை நிகழ்வில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையை சேர்ந்த கல்வி நிறுவனங்களான தேனி நாடார் சரசுவதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி முத்துதேவன்பட்டியில் உள்ள மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை வித்யாலயா மெட்ரிகுலேசன் பள்ளி, வடபுதுப்பட்டியில் உள்ள நாடார் சரசுவதி பெண்கள் மெட்ரிகுலேசன் பள்ளி வடபுதுப்பட்டியில் உள்ள நாடார் சரசுவதி பப்ளிக் பள்ளி நாடார் சரசுவதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை பல்வேறு நடனங்களின் மூலம் வெளிப்படுத்தினர்.

பல்வேறு நடன போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 
முடிவில் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் உமாகாந்தி நன்றி கூறினார்.

நாகராஜ், முதன்மை நிருபர் 

Comments