தேனி, அக்.10-
தேனி மாவட்டம், சின்னமனூர் வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நமது இந்தியா, நமக்கான இந்தியா எழுச்சி பேரணி சின்னமனூரில் 9.10.2024 அன்று நடைபெற்றது. இந்த பேரணிக்கு சின்னமனூர் வட்டார காங்கிரஸ் தலைவர் ஜீவா தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக தேனி மாவட்ட தலைவர் கூடலூர் முருகேசன் கலந்து கொண்டு பேரணியின் நோக்கங்கள் குறித்து விளக்கி பேசினார்.
இந்த பேரணியில் மாவட்ட துணைத்தலைவர் சன்னாசி, மாநில பொதுக்குழு உறுப்பினர் முனியாண்டி, வழக்கறிஞர் பிரிவு தலைவர் சத்தியமூர்த்தி, மாநில பேச்சாளர் சிவமணி, மாவட்ட செயலாளர் சம்சுதீன், எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாவட்ட தலைவர் இனியவன், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் பெரியகுளம் ஹம்சா முகமது, கம்பம் வட்டார தலைவர் ராஜா முஹம்மது, நகர் காங்கிரஸ் தலைவர்கள் பழனி முத்து, கம்பம் போஸ், தேனி கோபிநாத், ஐ.என்.டி.சி.யு நிர்வாகிகள், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் பேரணியில் கலந்து கொண்டனர்.
நாகராஜ், முதன்மை நிருபர்
Comments