கோவை புலியங்குளம் சாலையில் உள்ள தனியார் கூட்ட அரங்கில், நில வணிக தொழில் முனைவோர் நலச்சங்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 31.8.2024 அன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு கோவை வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.வெங்கிடுசாமி தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் ஜி.வி.நித்தியானந்தம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில தலைவரும், நிறுவனருமான மருரா.கருணாகரன், முன்னாள் எம்.எல்.ஏ., சங்க கெளரவ தலைவருமான வி.எஸ்.காளிமுத்து, சங்க ஆலோசனை கமிட்டி தலைவர் டாக்டர் பழனியப்பன் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு சங்கத்தின் கான் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினர்,
கூட்டத்தில் சங்க மாநில செயலாளர் ஐ.வேலுச்சாமி , சட்ட ஆலோசகர் கமிட்டி தலைவர் கே.தென்னரசு, மாவட்ட சட்ட ஆலோசகர் சி.முத்து சாமி, மாநில துணை செயலாளர் கே.எஸ்.வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள். கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர், கூட்ட முடிவில் அனைவருக்கும் நினைவு பரிசும், அறுசுவை உணவும் வழங்கப்பட்டது.இ
இந்த மாநில செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டன, அதில் இதுவரை நில வணிக தரகு தொழில் செய்யும் இடை தரகர்களுக்கு தொழிலுக்கான எந்த விதமான ஒரு உத்திரவாதம் இல்லாமலும், தொழிற்கான வியாபாரம் முடிந்ததும் முறையாக பார்த்து கொடுக்கும் கமிஷன் தொகை பெற்றுக் கொண்டு தங்கள் வாழ்வை நடத்தி வருகின்றனர்.
சில இடத்தில் அதுவும் கிடைக்காமல் தங்களுடைய உழைப்பிற்கு எந்த விதமான அங்கீகாரம் இல்லாமல் தரகு தொழிலை செய்து வரும் இடை தரகர்களுக்கு தொழிலுக்கான அங்கீகார அடையாள அட்டையை அரசு வழங்க வேண்டும்.
Comments