Skip to main content

கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான சிறப்பு கல்விக்கடன் முகாம் ஆக.30 அன்று நடக்கிறது: தேனி மாவட்ட கலெக்டர் தகவல்

தேனி மாவட்ட நிர்வாகம் சார்பாக கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் கல்விக்கடன் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிறப்பு கல்விக்கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஆண்டிபட்டி தாலுகா, திம்மரசநாயக்கனூரில் உள்ள பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் 30.8.2024 அன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கல்விக்கடன் வழங்கும் முகாம் (Education Loan Mela / Camp) நடைபெற உள்ளது.

இந்த கல்விக்கடன் வழங்கும் முகாமில் பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி, வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்லூரி, கால்நடை மருத்துவ கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, தொழிற்பயிற்சி கல்லூரி. சட்டக் கல்லூரி போன்ற அனைத்து வகையான கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகள் இம்முகாமில் கலந்து கொள்ளலாம். 

மேலும் இம்முகாமில் கலந்து கொள்ளும் மாணவ / மாணவியர்கள் தங்களின் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், முகவரிக்கான சான்று, ஆதார் கார்டு. பெற்றோரின் பான் கார்டு, வங்கிக்கணக்கு எண், Bonafide certificate உள்ளிட்ட தேவையான ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

இந்த முகாமில் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள். எனவே மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் கல்விக்கடன் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கும். ஏற்கனவே vidyalakshmi இணையதளத்தில் கல்விக்கடன் கோரி விண்ணப்பித்த மாணவ, மாணவிகளின் மனுக்களை பரிசீலனை செய்து கடன் வழங்க நடவடிக்கை எடுப்பார்கள். 

இம்முகாம் குறித்த விபரங்கள் மேலும் அறிய தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி), மாவட்ட கலெக்டர் அலுவலகம், தேனி (அறை எண்: 11) அவர்களை அணுகவும். எனவே மாணவர்கள் அனைவரும் தவறாமல் இந்த கல்விக்கடன்
முகாமினை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென தேனி மாவட்ட கலெக்டர்  ஆர்.வி.ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

பாண்டியன், நிர்வாக ஆசிரியர் 

Comments