Skip to main content

பெற்றோரை இழந்த 91 குழந்தைகளுக்கு ரூ.5,60,000 /- மதிப்பீட்டில் நிதி உதவி: தேனி மாவட்ட கலெக்டர் வழங்கினார்

 



தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் தனியார் பெரு நிறுவனங்களின் சமூக கூட்டாண்மை பொறுப்பு நிதியிலிருந்து 91 குழந்தைகளுக்கு ரூ.5.60,000/- மதிப்பீட்டிலான காசோலையினை மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா 28.8.2024 அன்று வழங்கினார்.

தேனி மாவட்டத்தில் பெற்றோர் இருவரையும் இழந்த அல்லது பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளை பராமரிக்க குழந்தை பாதுகாப்பு அலகின் கீழ் மத்திய, மாநில அரசின் நிதி பங்களிப்பில், நிதி ஆதரவு திட்டத்தின் மூலம் உதவித்தொகை 3 வருடத்திற்கு மாதந்தோறும் ரூ.4000/- வழங்கப்படுகிறது.

அதனடிப்படையில், பெற்றோர் இருவரையும் இழந்த அல்லது பெற்றோரில் ஒருவரை இழந்த 91 குழந்தைகளுக்கு மாவட்ட கலெக்டர் தலைமையில் ஊரக வளர்ச்சி முகமை அலுவலர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு), முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர். குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள், நிதி வழங்கியவர்களான தேனி குரு கிருஷ்ணா டெக்ஸ்டைல்ஸ் மில்ஸ் மற்றும் ராஜ் ஸ்ரீ சுகர்ஸ் (ம) கெமிக்கல்ஸ் நிறுவனங்களிலிருந்து வரப்பெற்ற நன்கொடையாளர்கள், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) அழகு சிறை தத்துவள மைய இயக்குநர் மற்றும் ஆரோக்கிய அகம் தொண்டு நிறுவன துணை இயக்குநர் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கு பெற்று குழந்தைகள் மற்றும் பெற்றோர்களிடம் கலந்தாய்வு மேற்கொண்டு கலந்தாய்வின் அடிப்படையில் பெற்றோர் இருவரையும் இழந்த 21 குழந்தைகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் ரூ.2,10,000/- மும். பெற்றோர் ஒருவரை இழந்த 70 குழந்தைகளுக்கு தலா ரூ. 5 ஆயிரம் வீதம் ரூ.3,50,000/- மும் ஆக மொத்தம் ரூ.5,60,000/- மதிப்பிலான காசோலைகளை தகுதியான 91 குழந்தைகளுக்கு உடனடி நிதிக்கான காசோலைகளை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சந்தியா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) முகமது அலிஜின்னா, மாவட்ட சமூகநல அலுவலர் சியாமளா தேவி மற்றும் குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள் உள்பட தேர்வு குழுவினர்கள் கலந்துகொண்டனர்.

சதீஷ், இணை ஆசிரியர் 

Comments