Skip to main content

தேனியில் தமிழ்நாடு மின்சார வாரியம் எம்ப்ளாய்ஸ் பெடரேஷன் தேனி மின் பகிர்மான வட்ட மாவட்ட பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு மின்சார வாரியம் எம்ப்ளாய்ஸ் பெடரேஷன் தேனி மின் பகிர்மான வட்ட மாவட்ட பொதுக்குழு கூட்டம் 26.8.2024 அன்று தேனி வாசவி மஹாலில் நடைபெற்றது.


கூட்டத்தில் மாநில உபதலைவர்- மதுரை திட்டச் செயலாளர் ராஜாங்கம், மாநில உபதலைவர்கள் முத்தையா, சிவசுப்புபாண்டியன், மாநில உபதலைவர் - திண்டுக்கல் திட்டச்செயலாளர் சுப்ரமணியன், மதுரை மாநகர் செயலாளர் டேவிட் பொன்னையா, மாநில இணை செயலாளர் சுப்ரமணியன், மதுரை மண்டல செயலாளர் வீரசேகர், மதுரை ஜி.சி.சி செயலாளர் சேதுராமன்
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

கூட்டத்தில் மாநில தலைவர் மணிகண்டன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பெடரேஷன் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார்.

கூட்டத்தில் மின்சார வாரியத்தில் நிர்வாகப்பிரிவு, கணக்குபிரிவு, வருவாய்பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.
மின்வாரியத்தால் தேர்வு செய்து பணி நியமனம் செய்யப்படாத 5000 கேங்மேன்களுக்கு பணி நியமனம உத்தரவு, விருப்ப மாறுதல் உத்தரவு மற்றும் (Cadre Conversion). கள உதவியாளராக பணி மாற்றம் செய்திடவும், மாறுதல் உத்தரவு பெற்றவர்களை பணி விடுப்பு செய்திட வேண்டும்.

1.12.2013-க்கு பிறகு பணியில் சேர்ந்து கேங்மேன்கள் மற்றும் வாரிசு பணியில் சேர்ந்த பணியாளர்களுக்கு 6% ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும்.
ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்திட வேண்டும்.
1-12-2023 ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை துவங்கிட வேண்டும். களப்பணியாளருக்கு தரமான தளவாடங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிட வேண்டும் என்பன உள்பட 12 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தலைவர் M.மகாலிங்கம், செயலாளர் R.மூக்கையா, பொருளாளர் R.காமராஜன், அமைப்பு செயலாளர் R.விவேகானந்தன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

நாகராஜ், முதன்மை நிருபர் 

Comments