Skip to main content

Posts

Showing posts from August, 2024

நடிகர் கார்த்தி நடித்த மெய்யழகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

கோவை, அவினாசி சாலையில் உள்ள கொடிசியா அரங்கில் 31.8.2024 அன்று நடிகர் கார்த்தி நடிப்பில், 96 பட இயக்குனர் எஸ்.பிரேம் குமார் இயக்கத்தில் வருகின்ற செப்டம்பர் 27-ம் தேதி திரையில் வெளிவர இருக்கும் மெய்யழகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா  நடைபெற்றது.  இந்த திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் ஒரு பாடலை பாடியுள்ளார். இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவக்குமார், கார்த்தி, அரவிந்த் சுவாமி, நடிகை ஸ்ரீ திவ்யா, இயக்குநர் பிரேம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  இந்த திரைப்படத்தில் யாரோ, இவன் யாரோ என்ற பாடலை நடிகர் கமல்ஹாசன் பாடியுள்ளார். கமல்ஹாசன் பாடல் பாடியதை ஒலிப்பதிவு போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி  இசை நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவக்குமார், சூலூர் அருகே உள்ள காசிகவுண்டர்புதூர் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் நான். குடிநீர், கழிப்பிடம், சாலை வசதி இல்லாத ஊரில் படித்து முன்னேறியவன். நான். 7 வருடம் படிக்க எனக்கு, 7 ஆயிரம் ரூபாய் தான் செலவு ஆனது.  சினிமா நடிகர் என்பதால் எனக்கு யாரும் பெண் தரவில்லை. புஞ்சை புளியம...

கோயமுத்தூரில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மேற்கு குறு மையம் தடகள போட்டிகள்

கோவை, தொண்டாமுத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் பாரதியார் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற  மேற்கு குறுமையம் தடகள போட்டிகள் கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது, இப்போட்டியில் தொண்டாமுத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரும்,  மேற்கு குறுமை விளையாட்டுப் போட்டிகளின் செயலாளர்  க.ரஹீமா பேகம் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தார்.  இதனை தொடர்ந்து விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கோவை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் தேசியக் கொடியை ஏற்றியும் . பாரதிய வித்யா பவன் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை  மகேஸ்வரி  மேற்கு மண்டல குறுமையம்  கொடியை ஏற்றி வைத்தார்கள். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்  டி. ஆனந்த் பள்ளியின் கொடியை ஏற்றி வைத்தார்.             விழாவில் 11 ஆம் வகுப்பு படிக்கும்  மாணவி  சி .நிவேதா ஒலிம்பிக் உறுதி மொழியை வாசிக்க பள்ளி மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.  இதனைத்தொடர்ந்து தடகள போட்டிகள் துவங்கி நடைபெற்றது.  இந்த போட்டிகளில் 14 வயதுக்கு உட்பட்டவர்கள், 17 வய...

கோவையில் நில வணிக தொழில் முனைவோர் நலச்சங்க கூட்டம்

கோவை புலியங்குளம் சாலையில் உள்ள தனியார் கூட்ட அரங்கில், நில  வணிக தொழில் முனைவோர் நலச்சங்கத்தின்  செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 31.8.2024 அன்று நடைபெற்றது.   கூட்டத்திற்கு கோவை வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.வெங்கிடுசாமி தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் ஜி.வி.நித்தியானந்தம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில தலைவரும், நிறுவனருமான மருரா.கருணாகரன், முன்னாள் எம்.எல்.ஏ., சங்க கெளரவ தலைவருமான வி.எஸ்.காளிமுத்து, சங்க ஆலோசனை கமிட்டி தலைவர் டாக்டர் பழனியப்பன்  பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு சங்கத்தின் கான் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினர்,  கூட்டத்தில் சங்க மாநில செயலாளர் ஐ.வேலுச்சாமி , சட்ட ஆலோசகர் கமிட்டி தலைவர் கே.தென்னரசு, மாவட்ட சட்ட ஆலோசகர் சி.முத்து சாமி, மாநில துணை செயலாளர் கே.எஸ்.வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள். கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர், கூட்ட முடிவில் அனைவருக்கும் நினைவு பரிசும், அறுசுவை உணவும் வழங்கப்பட்டது.இ இந்த மாநில செயற்குழு, பொதுக்க...

தேனி எல்.எஸ்.மில்ஸ் நிர்வாக இயக்குநர் எஸ்.மணிவண்ணன் அவர்களுக்கு பாராட்டு விழா

இந்திய காட்டன் பெடரேஷன் அமைப்பு வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்று தேனி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த எல். எஸ்.மில்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குநர் எஸ். மணிவண்ணன் அவர்களுக்கு பாராட்டு விழா தேனியில் 30.8.2024 அன்று நடைபெற்றது நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவில் தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர், தேனி மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் வக்கீல் எம்.கே.எம்.முத்துராமலிங்கம் தலைமையில் தேனி வெளிச்சம் அறக்கட்டளை நிர்வாகி நாணயம் சிதம்பரம் மற்றும் சமூக ஆர்வலர்கள் எல்.எஸ்.மில்ஸ் நிர்வாக இயக்குநர் எஸ்.மணிவண்ணன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து மடல் வழங்கி கௌரவித்தனர். நாகராஜ், முதன்மை நிருபர் 

தேனி நாடார் வித்யாலயா மெட்ரிக் பள்ளி ஏற்பாட்டில் குறுவட்ட போட்டி

தேனி மாவட்டத்தில் 2024-2025 ம் கல்வி ஆண்டின் தேனி குறுவட்ட போட்டியை தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளி ஏற்று நடத்தி வருகிறது.  இந்த போட்டிக்கான நிகழ்வு தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலை பள்ளியில் 30.8.2024 அன்று காலையில் துவங்கியது.    இந்நிகழ்விற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களின் தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கி ஒலிம்பிக் கொடியினை ஏற்றிவைத்து சிறப்பித்தார். உறவின்முறை உபதலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாடார் உறவின்முறை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளி செயலாளர் நவமணி வரவேற்றார். நிகழ்வில் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் R.சிவப்பிரசாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்று விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார். நிகழ்வின் போது தேனி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குபேந்திரன் கலந்து கொண்டு  குறு வட்டக் கொடியை ஏற்றினார். தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறை மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களின் உபதலைவர் கண...

தேனி மாவட்டத்தில் கலைஞர் கனவு இல்லம் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம். ஆண்டிபட்டி, கடமலை-மயிலை தேனி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கலைஞரின் கனவு இல்லம் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி 30.8.2024 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைச்சர் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல்மங்கலம் ஊராட்சி பகுதியில் நபார்டு திட்டத்தின்கீழ் அக்ரஹாரம் பகுதியில் வராக நதியின் குறுக்கே ரூ.4.53 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் உயர் மட்ட பாலம் அமைக்கும் பணியினையும். 15-வது நிதி மானியக்குழு 2023-2024 திட்டத்தின்கீழ் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணியினையும், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொம்மிநாயக்கன்பட்டி, புல்லக்காபட்டி, கோத்தலூத்து ஆகிய ஊராட்சிகளில் தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கலைஞரின் கனவு இல்லம் பணியினையும், இராஜதானியில் 15-வது நிதிகுழு மானியம் (பொது சுகாதாரம்) 2022-23 திட்டத்தின்கீழ் ரூ.39.68...

தேனியில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த முகாம்

தேனி மாவட்டம், சுக்குவாடன்பட்டி வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் 30.8.2024 அன்று வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்து மாவட்ட அளவிலான முகாம் சின்னமனூர் முல்லையாறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் தேனி மாவட்ட வேளாண் பொறியியல் துறை சார்பில் நடைபெற்றது. முகாமிற்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் இயக்குனர் புகழேந்தி தலைமையில் சிறுதானிய உணவுப் பொருட்கள் மற்றும் முருங்கை பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த கண்காட்சியில் சிறுதானியங்களிலான சோளம், கம்பு, ராகி இவற்றால் செய்யப்பட்ட உணவுப்பொருட்கள், முருங்கை சம்மந்தப்பட்ட உணவு பொருட்களும் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. அப்போது தேனி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வளர்மதி, மாவட்ட வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் சங்கர்ராம், மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பால்ராஜ், தேனி, உத்தமமாளையம் வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர்கள் ராஜா, கருப்பசாமி, உதவிப் பொறியாளர்கள் ராமகிருஷ்ணன், விஜயன், வினோத், வேளாண் உதவி இயக்குனர்கள், தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் மற்றும் நந்தினி, ராஜேஸ்வரி, சரண்யா உள்பட விவசாயிகள், ...

தேனியில் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கான தன்னம்பிக்கை வழிகாட்டுதல் பயிலரங்கம் நிகழ்ச்சி

தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை கல்வி குழுமம் மற்றும் தேனி வைகை அரிமா சங்கம் சார்பில் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான "தன்னம்பிக்கை வழிகாட்டுதல் பயிலரங்கம்" நிகழ்ச்சி 29.8.2024 அன்று தேனி அருகே வடபுதுப்பட்டியில் உள்ள நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள காமராஜர் கலையரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கி பேசுகையில், செயலில் இலட்சியமும், வெற்றியில் நம்பிக்கையும் இருந்தால் அனைவராலும் வாழ்வில் வெற்றி நிலையை அடைய முடியும். வாழ்க்கையில் முன்னேற குன்றாத உழைப்பு, குறையாத முயற்சி, வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை ஆகிய மூன்றும் வேண்டும். தோல்வி என்பது ஒரு தற்காலிக தடை, நமது நம்பிக்கை அந்த தடையை நகர்த்தெறியும், அறிவு ஒன்று தான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து அறிவை வளர்த்துக் கொண்டால் அனைத்து விதமான பயமும் அகன்றுவிடும். எனவே மாணவ மாணவிகள் அறிவை வளர்த்து, பயத்தை எரித்து, திறனை மேம்படுத்தி வாய்ப்புகளை வசப்படுத்தி கல்வியில் சிறந்து வாழ்வில் முன்னேற வேண்டும். இந்தியாவை இமயம் போல் உ...

கோவையில் சிறு-குறு தொழில் முனைவோருக்கு வங்கி கடன் உதவி மற்றும் கலந்தாய்வு கூட்டம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்பு

கோவை, அவினாசி சாலையில் உள்ள கொடிசியா கூட்ட அரங்கில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் கோவை மற்றும் சேலம் மண்டல அளவிலான ஆய்வு கூட்டம், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த நிறுவனங்களுடன் வசதிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 5 நபர்களுக்கும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 10 நபர்களுக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 6 நபர்களுக்கும் பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்க திட்டத்தின் கீழ் 6 நபர்களுக்கும், பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் ஒருவருக்கும் காப்புரிமை மாநில அனுமதி திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கும் புதிய தொழில் முனைவோர் மற்றும...

கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான சிறப்பு கல்விக்கடன் முகாம் ஆக.30 அன்று நடக்கிறது: தேனி மாவட்ட கலெக்டர் தகவல்

தேனி மாவட்ட நிர்வாகம் சார்பாக கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் கல்விக்கடன் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிறப்பு கல்விக்கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஆண்டிபட்டி தாலுகா, திம்மரசநாயக்கனூரில் உள்ள பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் 30.8.2024 அன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கல்விக்கடன் வழங்கும் முகாம் (Education Loan Mela / Camp) நடைபெற உள்ளது. இந்த கல்விக்கடன் வழங்கும் முகாமில் பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி, வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்லூரி, கால்நடை மருத்துவ கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, தொழிற்பயிற்சி கல்லூரி. சட்டக் கல்லூரி போன்ற அனைத்து வகையான கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகள் இம்முகாமில் கலந்து கொள்ளலாம்.  மேலும் இம்முகாமில் கலந்து கொள்ளும் மாணவ / மாணவியர்கள் தங்களின் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், முகவரிக்கான சான்று, ஆதார் கார்டு. பெற்றோரின் பான் கார்டு, வங்கிக்கணக்கு எண், Bonafide certificate உள்ளிட...

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேரளா வயநாடு மக்களுக்கு வழங்கப்படும் நிதி உதவியுடன் சேர்த்து கொள்ள தென் சென்னை விளையாட்டு துறை மாவட்ட தலைவரும் நிதி வழங்கினார்

  கேரளா மாநிலம், வயநாடு பகுதியில் பெரு வெள்ளத்தினால் ஏற்பட்ட பேரழிவால் உயிர் மற்றும் வீடு வாசலை இழந்த மக்களுக்கு தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வழங்கும் நிதியுடன். மாநில தலைவர் கு. செல்வ பெருந்தகை அவர்களிடம். தென் சென்னை மாவட்ட விளையாட்டு துறை தலைவர் வசிம் மீர் சார்பில் நன்கொடை வழங்கப்பட்டது. அப்போது தென் சென்னை மாவட்ட துணை தலைவர் PL. கதிரேசன் உடனிந்தார். TNCC organised a donation drive to provide relief to the landslide and flood victims of Wayanad. Handed over my contribution to TNCC President Mr. K. Selvaperunthagai, on 28.08.2024. இதனைத்தொடர்ந்து மறைந்த கன்னியாகுமரி முன்னாள் எம்.பி.,  எச்.வசந்தகுமாரின் 4-வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தென் சென்னை விளையாட்டு துறை மாவட்ட தலைவர் வசிம் மீர் அவர்கள் எச்.வசந்தகுமார் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். On the occasion of the 4th death anniversary of late Kanyakumari former MP, H. Vasanthakumar, Tamil Nadu Congress Committee South Chennai Sports Department ...

பெற்றோரை இழந்த 91 குழந்தைகளுக்கு ரூ.5,60,000 /- மதிப்பீட்டில் நிதி உதவி: தேனி மாவட்ட கலெக்டர் வழங்கினார்

  தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் தனியார் பெரு நிறுவனங்களின் சமூக கூட்டாண்மை பொறுப்பு நிதியிலிருந்து 91 குழந்தைகளுக்கு ரூ.5.60,000/- மதிப்பீட்டிலான காசோலையினை மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா 28.8.2024 அன்று வழங்கினார். தேனி மாவட்டத்தில் பெற்றோர் இருவரையும் இழந்த அல்லது பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளை பராமரிக்க குழந்தை பாதுகாப்பு அலகின் கீழ் மத்திய, மாநில அரசின் நிதி பங்களிப்பில், நிதி ஆதரவு திட்டத்தின் மூலம் உதவித்தொகை 3 வருடத்திற்கு மாதந்தோறும் ரூ.4000/- வழங்கப்படுகிறது. அதனடிப்படையில், பெற்றோர் இருவரையும் இழந்த அல்லது பெற்றோரில் ஒருவரை இழந்த 91 குழந்தைகளுக்கு மாவட்ட கலெக்டர் தலைமையில் ஊரக வளர்ச்சி முகமை அலுவலர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு), முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர். குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள், நிதி வழங்கியவர்களான தேனி குரு கிருஷ்ணா டெக்ஸ்டைல்ஸ் மில்ஸ் மற்றும் ராஜ் ஸ்ரீ சுகர்ஸ் (ம) கெமிக்கல்ஸ் நிறுவனங்களிலிருந்து வரப்பெற்ற நன்...

திருப்பூரில் மாநில அளவிலான யோகாசன போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற யுனிக் யோகாலயம் குழுவினர்

திருப்பூரில் மாநில அளவிலான யோகாசன போட்டி நடைபெற்றது, இப்போட்டி தமிழகத்தில் இருந்து பல்வேறு யோகாசன பயிற்சி மையங்களில் படிக்கும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.  ஸ்ட்டேட் லெவல் ஓபன் யோகாசன போட்டியில் ஜூனியர், சூப்பர் ஜூனியர் என 2 பிரிவுகளிலும் 400-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற யோகசன போட்டியில் ஒட்டு மொத்த  சம்பியன்ஷிப் பட்டத்தை யுனிக் யோகாலயம் மாணவர்கள்,மாணவிகள் பெற்று சாதனை படைத்தனர். இதேபோன்று 2024 நேஷனல் யோகா அசோசியேஷன் ஆஃப் இந்தியா, யோகா பெடரேஷன் ஆஃப் ஆசியா ஒருங்கிணைந்து நடத்திய யோகாசனா விழா 2 தினங்களாக நடந்தது. இதில் எளிய முறையில் தியானம், மூச்சு பயிற்சி யோகாசனம் செய்யும் வழி கற்பித்தனர். இதனை அடுத்து நடந்த பல கட்ட போட்டிகளில் சென்னை, திருச்சி, மதுரை, விருதுநகர், சேலம்,கோவை என பல மாவட்ட யோகாசன பயிற்சி மைய குழந்தைகள் போட்டிகளில் பங்கேற்று பரிசு மற்றும் சான்றிதழ் பெற்றனர். இதில் பல்வேறு போட்டிகளில்  யுனிக் யோகாலயம் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்று பரிசுகள் சான்றிதழ்கள் பெற்றனர்.  அதுபோல ஓவர் ஆல் சாம்பியன் பட்டத்தையும் யுனிக் யோகாலயம் மாணவர்கள், மாணவிகள்...

தேனியில் தமிழ்நாடு மின்சார வாரியம் எம்ப்ளாய்ஸ் பெடரேஷன் தேனி மின் பகிர்மான வட்ட மாவட்ட பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு மின்சார வாரியம் எம்ப்ளாய்ஸ் பெடரேஷன் தேனி மின் பகிர்மான வட்ட மாவட்ட பொதுக்குழு கூட்டம் 26.8.2024 அன்று தேனி வாசவி மஹாலில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில உபதலைவர்- மதுரை திட்டச் செயலாளர் ராஜாங்கம், மாநில உபதலைவர்கள் முத்தையா, சிவசுப்புபாண்டியன், மாநில உபதலைவர் - திண்டுக்கல் திட்டச்செயலாளர் சுப்ரமணியன், மதுரை மாநகர் செயலாளர் டேவிட் பொன்னையா, மாநில இணை செயலாளர் சுப்ரமணியன், மதுரை மண்டல செயலாளர் வீரசேகர், மதுரை ஜி.சி.சி செயலாளர் சேதுராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கூட்டத்தில் மாநில தலைவர் மணிகண்டன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பெடரேஷன் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தில் மின்சார வாரியத்தில் நிர்வாகப்பிரிவு, கணக்குபிரிவு, வருவாய்பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும். மின்வாரியத்தால் தேர்வு செய்து பணி நியமனம் செய்யப்படாத 5000 கேங்மேன்களுக்கு பணி நியமனம உத்தரவு, விருப்ப மாறுதல் உத்தரவு மற்றும் (Cadre Conversion). கள உதவியாளராக பணி மாற்றம் செய்திடவும், மாறுதல் உத்தரவு பெற்றவர்களை பணி விடுப்பு செய்திட வேண்டும். 1.12.2013-க்கு பிறகு பணியில் ...

சென்னை கொட்டிவாக்கத்தில் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா மற்றும் காங்கிரஸ் கமிட்டி தென் சென்னை விளையாட்டு துறை மாவட்ட தலைவருக்கு பாராட்டு விழா

  சென்னை ECR பகுதி கொட்டிவாக்கத்தில் 25.8.2024 அன்று மறைந்த முன்னாள் பாரத பிரதமர்  ராஜிவ் காந்தி அவர்களின் 80 வது பிறந்த நாள் விழா மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் தென் சென்னை விளையாட்டு துறை மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்ட வசிம் மீர் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.  விழாவிற்கு மண்டல குழு தலைவர்  கோசல்ராமன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட பொருளாளர் மயிலை நந்தகுமார், மாவட்ட துணை தலைவர் PL. கதிரேசன் ஆகியோர் பங்கேற்றனர்.  நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, பகுதி, வட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது  ஏழை-எளிய மக்களுக்கு சேலை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. நாகராஜ், முதன்மை நிருபர்