தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை கல்வி குழுமம் மற்றும் தேனி வைகை அரிமா சங்கம் சார்பில் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான "தன்னம்பிக்கை வழிகாட்டுதல் பயிலரங்கம்" நிகழ்ச்சி 29.8.2024 அன்று தேனி அருகே வடபுதுப்பட்டியில் உள்ள நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள காமராஜர் கலையரங்கத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கி பேசுகையில், செயலில் இலட்சியமும், வெற்றியில் நம்பிக்கையும் இருந்தால் அனைவராலும் வாழ்வில் வெற்றி நிலையை அடைய முடியும். வாழ்க்கையில் முன்னேற குன்றாத உழைப்பு, குறையாத முயற்சி, வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை ஆகிய மூன்றும் வேண்டும்.
தோல்வி என்பது ஒரு தற்காலிக தடை, நமது நம்பிக்கை அந்த தடையை நகர்த்தெறியும், அறிவு ஒன்று தான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து அறிவை வளர்த்துக் கொண்டால் அனைத்து விதமான பயமும் அகன்றுவிடும். எனவே மாணவ மாணவிகள் அறிவை வளர்த்து, பயத்தை எரித்து, திறனை மேம்படுத்தி வாய்ப்புகளை வசப்படுத்தி கல்வியில் சிறந்து வாழ்வில் முன்னேற வேண்டும்.
இந்தியாவை இமயம் போல் உயர்ந்த தூண்களாகிய நீங்கள் வலிமையாகவும், திறமையாகவும் செயல்பட சிறந்த கல்வி உதவும். ஆகையால் கரையில்லா கல்வியை தடையின்றி கற்று வாழ்க்கையில் முன்னேறி நாட்டையும் முன்னேற்றுங்கள் என்று பேசினார்.
தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை உபதலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல். பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட அரிமா சங்க ஒருங்கிணைப்பாளர் இராதாகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியினை தேனி வைகை அரிமா சங்க தலைவர் சரவணராஜா, நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயலாளர் முருகன், பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயலாளர் ராதாகிருஷ்ணன், முத்துதேவன்பட்டியில் உள்ள நாடார் மெட்ரிகுலேசன் பள்ளி செயலாளர் பாலசரவணக்குமார், தேனி நாடார் வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளி செயலாளர் தவமணி, வடபுதுப்பட்டியில் உள்ள நாடார் பெண்கள் மெட்ரிக்குலேசன் பள்ளி செயலாளர் இலட்சுமணன், வடபுதுப்பட்டியில் உள்ள நாடார் சரசுவதி பப்ளிக் ஸ்கூல் செயலாளர் கண்ணன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தனர்.
அரிமா சங்க மாவட்ட தலைவர் சாமி முகப்புரை ஆற்றினார். அவர்தம் உரையில், மாணவ- மாணவியர்கள் சிறப்பு விருந்தினரின் உரைகளை கேட்டு நல்ல கல்லூரிகளை தேர்ந்தெடுத்து திறமைகளை வளர்த்துக் கொண்டு வேலை வாய்ப்புகளை பெற்று வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கேரியர் கெய்டன்ஸ எக்ஸ்பர்ட் ( Career Guidance Expert )அஸ்வின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர்தம் உரையில், வாழ்வில் வெற்றி பெற தன்னம்பிக்கை மிகவும் அவசியம் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள நேர்மறை எண்ணங்கள் மிகவும் முக்கியம் ஆதலால் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டால் வாழ்வில் எளிதாக வெற்றி அடைய முடியும் என்று கூறினார்.
மாணவ மாணவியர்கள் மேல்நிலை வகுப்பை முடித்துவிட்டு எவ்வாறு கல்லூரியை தேர்ந்தெடுக்க வேண்டும். எவ்வாறு தம் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும், எவ்வாறு நமது வேலை வாய்ப்புகளை பெற்று கொள்ள வேண்டும் எவ்வாறு நாம் வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்பதை எடுத்துக் கூறினார்.
மேல்நிலை கல்வி படித்து முடித்தவுடன் மாணவ, மாணவியர்கள் தம் கனவுகளை நினைவாக்க
தொழில்நுட்பங்களும், போட்டிகளும் நிறைந்த உலகத்தில் நன்றாக படித்தால் மட்டுமே வாழ்வில் வெற்றி பெற முடியும். அதற்கு நல்ல கல்லூரிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறினார்.
சிறந்த கல்லூரிகளை தேர்ந்தெடுத்து படித்துக்கொண்டே நமது திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். திறமைகளை வளர்த்துக் கொள்ள இரண்டு முக்கிய பண்புகளான பிரச்சனைகளை எளிதாக திக்கும் திறன் மற்றும் கற்கும் திறன் போன்றவற்றை வளர்த்துக் கொள்வதன் மூலம் சிந்திக்கும் திறன் பகுத்தறிவு அவசரகால முடிவெடுக்கும் திறன். ஆகியவற்றை பெற்று வாழ்வில் வெற்றி பெற முடியும். தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறையை சார்ந்த மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 1500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு தன்னம்பிக்கை பெற்று கல்வியின் அடுத்த படிநிலையை தெரிந்துக்கொண்டு பயடைந்தனர்.
முடிவில் முத்துதேவன்பட்டியில் உள்ள நாடார் மெட்ரிகுலேசன் பள்ளி செயலாளர் பாலசரவணக்குமார் நன்றி கூறினார்.
நாகராஜ், முதன்மை நிருபர்
Comments