தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாலத்தை உடைத்து சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர், எஸ்.பி-யிடம் கோரிக்கை மனு
தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட ஜெய் ஆஞ்சநேயா நகர் குடியிருப்போர் நலசங்க செயலாளர் இளங்கோ தலைமையில் அப்பகுதியில் குடியிருப்போர் தேனி மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில்,
தேனி வட்டம், வீரபாண்டி கிராமம், பழனிசெட்டிபட்டி, ஜெய் ஆஞ்சநேயா நகரில் சுமார் 300 குடும்பங்களுக்கு மேலாக குடியிருந்து வருகிறோம். மேற்படி எங்கள் குடியிருப்பு பகுதியில் குடியிருந்து வரும் பொதுமக்கள் மற்றும் சுமார் 500 குடும்பங்களுக்கும் மேலாக சூர்யா அவென்யுவில் குடியிருந்து வரும் பொதுமக்களும் தேனி வட்டம்,வீரபாண்டி கிராமம், சர்வே எண். 1454-ல் தேனி to குமுளி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து மேற்கிலிருந்து கிழக்காக பல ஆண்டுகளாக விவசாய நிலங்களுக்கு போகக்கூடிய பாதையாக பயன்படுத்தப்பட்டு வந்தும், மேற்படி பாதையில் தற்போதைய சர்வே எண். 1454/1A-ல் கட்டுப்பட்ட நிலத்தில் கிழக்கு பக்கம் சுமார் 5 மீட்டர் அகலத்தில் தென் வடலாக விவசாயத்திற்கு பல ஆண்டுகளாக வாய்க்காலில் பாலம் அமைத்து பயன்படுத்தி வந்தும், அதன்பிறகு மேற்படி பாதையின் இருபுறமும் குடியிருப்பு பகுதியாக மாறி பிறகு மேற்படி குடியிருப்பு பகுதி வாசவி காலனி என பெயரிடப்பட்டது.
அதன்பிறகு மேற்படி பாதையில் அதாவது மேற்படி வாசவி காலனியின் மத்தியில் தேனி to குமுளி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து மேற்கிலிருந்து கிழக்காக அரசுக்கு சொந்தமான தார்சாலை சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு மேலாக பழனிசெட்டிபட்டி பேரூராட்சியால் அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாக மேற்படி வாசவி காலனி, ஜெய் ஆஞ்சநேயா நகர் மற்றும் சூர்யா அவென்யுவில் குடியிருந்து வரும் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி வருகிறோம்.
மேற்படி தேனி வட்டம், வீரபாண்டி கிராமம், சர்வே எண். 1454-ல் பட்டா எண் 2435 பட்டாவில் 0.94.0 ஏர்ஸ்க்கு ஏக்கர் 2 ஏக்கர் 32 செண்டு புஞ்சை நிலம் பழனிசெட்டிபட்டியை சேர்ந்த குண்டப்ப செட்டியார் மகன் சுப்பிரமணியம்-1, கணபதி செட்டியார் மகன் செல்வக்குமார்-2, வேலு செட்டியார் மகன் R.V.பாண்டியன்-3, பழனிச்சாமி மகன் S.R.P.ஜெகநாதன்-4 ஆகிய 4 நபர்கள் பெயரில் பட்டா எண். 2679 ஆக கூட்டுப்பட்டா ஏற்பட்டுள்ளது.
மேற்படி கூட்டுப்பட்டாவின் அடிப்படையில் மேற்படி S.R.P.ஜெகநாதன் கடந்த 30.5.1994-ம் தேதி கேசவன் S/o.ஜெயகோபால் செட்டியார் என்பவருக்கு தேனி சார்பதிவக ஆவண எண். Bk-4/88/1994-ஆக ஒரு ஜெனரல் பவர் பத்திரம் மேற்படி சர்வே எண்.1454-ல் கட்டுப்பட்ட நிலத்தில் 2 ஏக்கர் 32 செண்டில் நடுமய்யம் 60 செண்டில் கீழ்புரம் தென்பக்கம் 8.1/4செண்டு அவர் கைவசம் நிறுத்திக் கொண்டது போக பாக்கி நிலமான 51 செண்டு நிலத்தை எழுதிக் கொடுத்துள்ளார். மேற்படி நிலத்தற்கு நான்குமால் "கிழக்கு வாய்க்கால், மேற்கு ஈஸ்வரன், பத்திரி நாராயணன் இவர்கள் கிரைய நிலம், வடக்கு - பி.எஸ்.சுப்பிரமணியம், செல்வக்குமார் வகையறா, வி.கே.எஸ்.வகையறா இவர்கள் நிலம்,தெற்கு - பி.வி.பாண்டியன் வகையறா நிலம்" என தெளிவாக குறிப்பிட்டு எழுதிக் கொடுத்துள்ளார். மேலும் மேற்படி ஜெனரல் பவர் பத்திரத்தின் அடிப்படையில் பெற்ற 51 செண்டு நிலம் அனைத்தையும்மேற்படி கேசவன் வீட்டடி இடத்திற்கு விற்று தற்போது வீடு கட்டி குடியிருப்பு பகுதிகளாக உள்ளது.
இப்படி இருக்கையில் மேற்படி S.R.P.ஜெகநாதன் அவர்களின் மகளும், சிவக்குமார் அவர்களின் மனைவியுமான ஜெகதாமணி, பழனிசெட்டிபட்டியை சேர்ந்த S.R.P.ஜெகநாதன் அவர்களின் மகளும், சிங்காரவேலன் அவர்களின் மனைவியுமான சிவரஞ்சனி, S.R.P.ஜெகநாதன் அவர்களின் மனைவி மல்லிகா @ கிரிஜா மல்லிகா, S.R.P.ஜெகநாதன் அவர்களின் மகன் கார்த்திகேயன், O. ஜெகநாதன் அவர்களின் மகன் முருகேசன், முருகேசன் அவர்களின் மனைவி சாந்தி மற்றும் சிலர் ஒன்று கூடி சதிதிட்டம் தீட்டி மேற்படி பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் அரசுக்கு சொந்தமான தார் சாலையையும், மேற்படி வாய்காலையும் அபகரிக்க வேண்டுமென்ற கெட்ட எண்ணத்தில் செயல்பட்டு மேற்படி S.R.P.ஜெகநாதன் இறந்த பிறகு கடந்த 18.10.2011-ம் தேதி மேற்படி தார் சாலையையும், மேற்படி வாய்க்காலும் அமைந்துள்ள மேற்படி சொத்தான வீரபாண்டி கிராமம், உட்கடை பழனிசெட்டிபட்டியில் வடகிழக்குப்பக்கம் S.R.P.ஜெகநாதன் பெயரில் 2679 எண் கூட்டு பட்டா ஏற்பட்டுள்ள மனையடி அயன் சர்வே 1454/1A நிர் 0.80.5 ஏர்ஸ்க்கு ஏக்கர் 1 ஏக்கர் 99 செண்டில் மையத்தில் கிழக்கு கடைசியில் 11181 1/2 சதுரடி காலி மனையிடத்துக்கு நான்கு மால் "வடக்கு - V.K.சுப்பிரமணியம் வகையறா மனையிடம், கிழக்கு - நாராயணசாமி நஞ்சை நிலம், தெற்கு பழனிச்சாமி வகையறா புன்செய், மேற்கு கணபதிமாறன் வீடு" எனவும் தவறான சொத்து விபரம் மற்றும் தவறான நான்கு மால்கள் காட்டியும். அதாவது மேற்படி சொத்து அமைந்துள்ள நான்கு மாலில் கண்டுள்ள கிழக்கு வாய்க்கால்-ஐ பல்லாயிரக்கணக்கான நன்செய் விவசாய நிலங்களுக்கு நீர் பாசன வசதிக்காக பயன்படுத்தும் நீர் பாசன வாய்க்காலை உள்ளதை மறைத்தும்,மேற்படி மல்லிகா @ கிரிஜா மல்லிகா, கார்த்திகேயன் ஆகிய இருவரும், மேற்படி ஜெகதாமணி, சிவரஞ்சனி ஆகிய இருவருக்கும் தேனி சார்பதிவக ஆவண எண். 9919/2011-ஆக மோசடியாக ஒரு தானசெட்டில்மெண்ட் பத்திரம் மோசடியாக உற்பத்தி செய்துள்ளனர்.
மேற்படி மோசடி ஆவணத்தில் மேற்படி முருகேசன்,சாந்தி ஆகிய இருவரும் சாட்சி கையொப்பம் போட்டுள்ளனர். மேற்படி மோசடி தான பத்திரத்தின் படி மேற்படி நபர்களின் செல்வாக்கினை பயன்படுத்தி ஸ்தலத்தினை ஆய்வு எதுவும் மேற்கொள்ளாமல் அரசினை ஏமாற்றி மேற்படி நீர் பாசன வாய்க்கால், தார் சாலை மற்றும் பாலத்தினையும் மறைத்து, மேற்படி ஜெகதாமணி, சிவரஞ்சனி ஆகிய இருவர் பெயரிலும் சர்வே எண். 1454/1AB ஆக உட்பிரிவு செய்து பட்டா எண். 5600 ஆக மோசடியாக தனிப்பட்டா பெற்றுள்ளனர்.
மேற்படி ஜெகதாமணி, சிவரஞ்சனி, கார்த்திகேயன் அவர்களின் தந்தையுமான, மல்லிகா @ கிரிஜா மல்லிகா, முருகேசன், சாந்தி ஆகியோர்கள் ஒன்று கூடி அரசுக்கு சொந்தமான மேற்படி தார் சாலையையும் மற்றும் வாய்க்காலையும் அபகரிக்க வேண்டுமென்ற கெட்ட எண்ணத்தில் செயல்பட்டு மேற்படி S.R.P.ஜெகநாதன், கேசவன் என்பவருக்கு எழுதிக் கொடுத்த மேற்படி தேனி சார்பதிவக ஆவண எண். Bk-4/88/1994 ஜெனரல் பவர் பத்திரத்தையும், மேற்படி பவர் பத்திரத்தின் அடிப்படையில் கிரையப்பத்திரங்களையும் மறைத்து, மேற்படி பத்திரப்படி மேற்படி நிலத்தில் 8.1/4 செண்டு மட்டும் மீதம் உள்ள நிலையில் 11181 ½ சதுரடி என அளவு அதிகமாகவும், நான்குமால் தவறாகவும் காட்டி பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் அரசுக்கு சொந்தமான மேற்படி தார் சாலையையும் மற்றும் வாய்க்காலையும் அபகரித்து மேற்படி நபர்கள் அனைவரும் சேர்ந்து சுமார் 100 குண்டர்களை வைத்து JCB, பொக்லைன் இயந்திரங்களை வைத்து மேற்படி வாய்க்காலில் போட்டிருந்த மேற்படி பாலத்தை சட்டவிரோதமாக உடைத்து சேதப்படுத்தி, மேற்படி பாதையை வழிமறித்து அடைத்துள்ளனர்.
மேற்படி பல பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் அரசுக்கு சொந்தமான மேற்படி பாலத்தை உடைத்து, மேற்படி தார் சாலையையும், மேற்படி வாய்க்காலையும் மோசடி ஆவணங்களின் மூலம் ஆக்கிரமித்துள்ளதால் மூத்தகுடி மக்கள், பள்ளிக்குழந்தைகள் மற்றும்
பல்லாயிரக்கணக்கான மக்கள் மருத்துவமனை, பள்ளிக்கும், பணிக்கும் மற்றும் அன்றாட தேவைகளுக்கும் வெளியே செல்ல முடியாமலும், அவதியுற்று வருகின்றனர்.
ஆகவே மேன்மை தங்கிய சமூகம் அவர்கள் தேனி வட்டம், வீரபாண்டி கிராமம், சர்வே எண். 1454-ல் கட்டுப்பட்ட நிலத்தில், தற்போதைய சர்வே எண். 1454/1A-ல் கட்டுப்பட்ட நிலத்தில் மேற்படி நிலத்தில் 8.1/4 செண்டு மட்டும் மீதம் உள்ள நிலையில் 11181 1/½ சதுரடி என அளவு அதிகமாகவும், நான்குமால் தவறாகவும் காட்டி தேனி to குமுளி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பழனிசெட்டிபட்டியில் வாசவி காலனியில் மேற்கிலிருந்து கிழக்காக பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் அரசுக்கு சொந்தமான மேற்படி பாலத்தை உடைத்து சேதப்படுத்தி, மேற்படி தார் சாலையையும், மேற்படி வாய்க்காலையும் மோசடி ஆவணங்களின் உற்பத்தி செய்து மேற்படி ஆவணங்களின் அடிப்படையில் ஒன்றுகூடி சதி திட்டம் தீட்டி அபகரிக்க வேண்டுமென்ற கெட்ட எண்ணத்தில் ஆக்கிரமித்துள்ள மேற்படி ஜெகதாமணி, சிவரஞ்சனி, கார்த்திகேயன், மல்லிகா @ கிரிஜா மல்லிகா, முருகேசன்,சாந்தி ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
பாண்டியன், உதவி ஆசிரியர்
Comments