தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை சார்பில் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கான இலவச கருத்தரித்தல் பரிசோதனை முகாம்: 85 தம்பதிகள் பயனடைந்தனர்
தேனியில் மகப்பேறு மருத்துவத்தில் கடந்த 3 தலைமுறைகளாக புகழ்பெற்ற தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை சார்பில் குழந்தை இல்லாத தம்பதிகளுக்காக இன்று (28.7.2024) ஞாயிற்றுக்கிழமை இலவச கருத்தரித்தல் பரிசோதனை முகாம் கம்பம் குலாலர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த இலவச மருத்துவ முகாமை கம்பம் நகராட்சி தலைவர் வனிதா நெப்போலியன், கவுன்சிலர் அபிராமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் கம்பம் நகராட்சி கவுன்சிலர்கள் ராஜா, அன்புகுமாரி, ரோஜாரமணி, விஜயலட்சுமி, வீருசிக்கம்மாள் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த முகாமில் திருமணமாகி ஒரு வருடத்திற்கு மேல் குழந்தை இல்லாதவர்கள், தொடர்ச்சியாக கருச்சிதைவால் பாதிக்கப்பட்டவர்கள், கருக்குழாய் அடைப்பு உள்ளவர்கள், விந்தணு குறைபாடு உள்ளவர்கள், கர்ப்பப்பையில் நீர்க்கட்டி உள்ளவர்கள் என்று 85-க்கும் மேற்பட்ட தம்பதிகள் கலந்து கொண்டார்கள்.
அவர்களுக்கு ரூ. 10,000 மதிப்புள்ள அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை, விந்தணு பரிசோதனை மற்றும் மருத்துவ பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டன.
இந்த தம்பதிகளுக்கு கருத்தரித்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர்கள் டாக்டர். காதர்சா, டாக்டர். சுலேகா, டாக்டர் பிர்தவ்ஸ் பாத்திமா மற்றும் டாக்டர். கிறிஸ்டி ஆகியோர் தலைமையிலான குழுவினர் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டனர். முகாமில் கலந்து கொண்ட தம்பதிகளுக்கு மருந்துகளும் வழங்கப்பட்டன.
இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை மருத்துவமனை பொது மேலாளர் சாந்தி, எபி ஜேம்ஸ், மக்கள் தொடர்பு அலுவலர்கள் சலீம், ஷேக் பரீது மற்றும் சையது அப்பாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.
பாண்டியன், உதவி ஆசிரியர்
Comments