Skip to main content

இந்து எழுச்சி முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது குறித்து ஆலோசனை கூட்டம் ஆகஸ்ட் 11-ல் நடக்கிறது: வார வழிபாடு கூட்டத்தில் முடிவு


தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி தலைமை அலுவலகத்தில் வார வழிபாடு கூட்டம் 28.7.2024 அன்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு இந்து எழுச்சி முன்னணி நகர செயலாளர் ஜீவா தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் இரத்தனம் முன்னிலை வகித்தார். 

கூட்டத்திற்கு நிறுவனர் ரவி, மாவட்ட தலைவர் இராமராஜ்,  மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் ஆகியோர் வழிகாட்டினர்.

கூட்டத்தில் இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியில் கீழ்கண்ட தீர்மானங்ள் 
நிறைவேற்றப்பட்டன 

தீர்மானம் (1)
பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் முதல் வெண்கல பதக்கம் பெற்ற சகோதரி 
"மனுபாக்கர்" அவர்களுக்கு இந்து எழுச்சி முன்னணி பாராட்டுகளையும்,                        வாழ்த்துக்களையும் 
தெரிவித்துக்கொள்கிறது 

தீர்மானம் ( 2) 
தேனி-வீரபாண்டி இடையே உள்ள "மின்அரசுநகர்" பகுதி எதிர்ப்புறம் உள்ள விவசாய பூமியான தென்னந்தோப்பை    மதமாற்றத்திற்கான கேந்திரமாக 
பயன்படுத்துவதோடு "இயேசு பண்ணை" "இயேசு நகர்" என்ற போர்டுகளை எவ்வித அனுமதி இல்லாமல் வைத்திருப்பது சட்ட விரோதமான செயல் என்பதால் அந்த போர்டுகளை உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்றுவதோடு  அனுமதி இல்லாமல் நடைபெறும் மதக் கூட்டங்களை கட்டுப்படுத்த வேண்டுமென இந்து எழுச்சி முன்னணி கேட்டுக்கொள்கிறது.  

தீர்மானம் (3)
வருகின்ற 11.8.2024-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 
பொம்மையைகவுண்டன்பட்டி GPA மஹாலில் நடைபெறும் 
ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டத்தை 
சிறப்பாக நடத்துவதென முடிவு செய்யப்பட்டது..

பாண்டியன், உதவி ஆசிரியர் 

Comments