தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு தேனி மாவட்ட தலைவர் உடையாளி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சென்னமராஜ் கோரிக்கை விளக்க உரையாற்றினார். மாநில துணைத்தலைவர் முகமது அலி ஜின்னா சிறப்புரை ஆற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் சங்க தீபன் அப்துல்லா, சத்துணவு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் தங்க மீனா, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க தேன்மொழி, அரசு ஊழியர் சங்க மாநில தணிக்கையாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தின்போது புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 4 லட்சத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணி நியமனம் வழங்க விதிக்கப்பட்ட மறைமுக தடையை புதுப்பிக்க கூடாது. ஒப்படைப்பு விடுப்பு ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
சிவபாலன், சிறப்பு நிருபர்
Comments