Skip to main content

தேனி எல்.எஸ்.மில் நிர்வாகம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் உபகரணங்கள்

தேனி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை மூலம் தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, கடமலைக்குண்டு, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய 8 வட்டாரங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வகுப்புகள் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது.


இந்த பள்ளிகளில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மாற்று திறனாளி குழந்தைகளுக்கு தேவையான உபகரணங்கள் தேனி எல்.எஸ்.மில் நிர்வாகம் சார்பில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

அதன்படி தேனி மாவட்ட அளவில் வறுமை கோட்டுக்கு கீழ் 131 மாற்றுத்திறனாளி குழந்தைகள் இருப்பது கள ஆய்வில் கண்டறியப்பட்டு இந்த குழந்தைகளுக்கு தேவையான காதொலி கருவி, காலிபர் ஷூ, ரோலேட்டர், சிபி சேர், வீல் சேர், செயற்கை கால் மற்றும் செயற்கை என ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் வழங்க எல். எஸ்.மில் நிர்வாகம் முடிவு செய்து அதற்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி தேனி வீரபாண்டி அருகே உள்ள எல்.எஸ் மில் 2-வது யூனிட் வளாகத்தில் நடந்தது.


இந்நிகழ்ச்சிக்கு எல்.எஸ்.மில் நிர்வாக இயக்குனர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். இணை நிர்வாக இயக்குனர் சாந்தி மணிவண்ணன் மற்றும் ஐஸ்வர்யா தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மில் உதவி பொது மேலாளர் நிவாஸ் வரவேற்றார். 

நிகழ்ச்சியின் போது 131 மாற்றுதிறனாளிகளுக்கு தேவையான காதொலி கருவி, காலிபர் ஷூ, ரோலேட்டர், சிபி சேர், வீல் சேர், செயற்கை கால் மற்றும் செயற்கை கை ஆகியவற்றை எல்.எஸ்.மில் நிர்வாக இயக்குனர் மணிவண்ணன் வழங்கினார் 

இந்நிகழ்ச்சியில் பிசியோதெரபிஸ்ட் கார்த்திகேயன், பேராசிரியர் ஈஸ்வர், தேனி அல்லிநகரம் நகராட்சி நகர மன்ற துணைத் தலைவர் வக்கீல் செல்வம், எல்.எம்.சி அர்ஜுன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் மில் நிர்வாக முதன்மை நீதி அலுவலர் ஞானகுருசாமி நன்றி கூறினார்.

பாண்டியன், உதவி ஆசிரியர் 

Comments