Skip to main content

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் பன்னாட்டு நிறுவனத்தின் விரிவாக்க மையம் திறப்பு

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் பெங்களூர் பன்னாட்டு நிறுவனமான WG Tech Solution Pvt.Ltd. நிறுவனத்தின் விரிவாக்க மைய அலுவலக திறப்பு விழா 3.5.2024 அன்று நடைபெற்றது. 

விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். உறவின்முறை உபதலைவர் கணேஷ். பொதுச்செயலாளர் ஆனந்தவேல் பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கல்லூரியின் செயலாளர்கள் ராஜ்குமார். மகேஸ்வரன், இணைச்செயலாளர் நவீன்ராம் கல்லூரியின் முதல்வர் டாக்டர் மதளைசுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் WG Tech Solution Pvt.Ltd. நிறுவனத்தின் விரிவாக்க மைய அலுவலகத்தை அந்நிறுவனத்தின் CEO கண்ணன் ஸ்ரீனிவாசகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார். 

இதனைத்தொடர்ந்து அவர் பேசுகையில், இந்நிறுவனத்தின் விரிவாக்க GOHELLA அலுவலகத்தின் மூலம் நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ECE துறையை சேர்ந்த 5 மாணவர்களுக்கு (அஜந்த மீனா, கிறிஸ்டி, மேனகா, நந்தினி மற்றும் சௌந்தர்யா) பணி நியமன ஆணை வழங்கப்பட்டது (மாத சம்பளம் ரூபாய். 18,000/-). மேலும் இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவ/மாணவியர்களுக்கு வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்துதல், தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்குதல் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டாண்மை போன்ற திறன்களை வழங்கி 100% வேலை வாய்ப்பினை அளிக்கும் நோக்கத்தோடு செயல்படும் என பேசினார்.

இந்த விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், அனைத்து கல்வி நிறுவனங்களின் செயலாளர்கள், இணைச்செயலாளர்கள், கல்வி நிறுவனங்களின் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி துணை முதல்வர்கள் மாதவன், சத்யா, வேலைவாய்ப்பு அலுவலர் கார்த்திகேயன் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

சதீஷ், இணை ஆசிரியர் 


Comments