தேனி வடக்கு நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நீர் மோர் பந்தல் அல்லிநகரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பந்தலில் நீர்மோர் வழங்கும் பணி 3.5.2024 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தேனி வடக்கு நகர செயலாளர் குரு கணேஷ் தலைமை தாங்கினார். அமமுக அமைப்பு செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் கதிர்காமு முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியின் போது தேனி வடக்கு மாவட்ட செயலாளர் காசிமாயன் நீர்மோர், தண்ணீர் மற்றும் தர்பூசணி பழங்கள் பொதுமக்களுக்கு வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அ.ம.மு.க நிர்வாகிகள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
பாண்டியன், உதவி ஆசிரியர்
Comments