தேனி நகரில் உள்ள மதுரை சாலையில் பங்களாமேடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா 3 நாட்கள் கொண்டாடப்பட்டது.
திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தீச்சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல் போன்ற நேர்த்தி கடனை நிறைவேற்றினார்கள்.
திருவிழாவின் 3 நாள் நிகழ்வில் பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று ஆற்றில் கரைத்தனர். இதனைத்தொடர்ந்து இரவு ஆடலும் பாடலும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கிடையே நிகழ்ச்சியின் போது தேனி நகராட்சி 32-வது வார்டு பகுதியில் இருந்து 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் 3 மதிப்பெண்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் விழா குழு தலைவர் மாணிக்கம், துணைத்தலைவர் அன்னக்கொடி, விழாக்குழு செயலாளரும், தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற துணைத்தலைவர் வக்கீல் செல்வம், துணைச்செயலாளர் பாலமுருகன், பொருளாளர் ஜோதி மொசைக் செல்லம், இணைச்செயலாளர் ரேணுகா சிமெண்ட் சேதுராமன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
அய்யன் குமார், சிறப்பு நிருபர்
Comments