தேனி நகரில் மதுரை சாலையில் உள்ள ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் கட்டுமானப்பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த பணியின் காரணமாக பங்களாமேடு கீழே உள்ள தேனி எவரெஸ்ட் ஹோட்டலிருந்து அரண்மனைப்புதூர் விலக்கு இரயில் கேட் வரை பாலம் கட்டும் பணி அருகே ஒருபுறம் வாகனங்கள் சென்று வர சாலை ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது பெய்த வரும் மழையின் காரணமாக இந்த சாலை பகுதி குண்டும் குழியுமாக பல்லாங்குழி சாலையாக மாறி உள்ளது.
இதனால் இந்த சாலையை கடந்து செல்லும் ஆம்புலன்ஸ் உட்பட வாகனங்கள் அனைத்தும் குலுங்கி குலுங்கி செல்கிறது .
இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். எனவே சம்மந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தற்காலிகமாக சாலையை சரி செய்ய முன் வரவேண்டும்
தவறும் பட்சத்தில் இந்து எழுச்சி முன்னணி குண்டும் குழியுமாக உள்ள சாலையை மூடும் போராட்டம் மேற்கொள்ளும் என இந்து எழுச்சி முன்னணி தேனி மாவட்ட தலைவர் இராமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அய்யன் குமார், சிறப்பு நிருபர்
Comments