பெரியகுளத்தில் ஸ்ரீ கைலாச அறக்கட்டளை, ஆதிபரமேஸ்வரர் தியான மையம் சார்பில் 1108 மூலிகை சித்தலிங்கம் பிரதிஷ்டை: மே 19-ந் தேதி நடக்கிறது
தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரையில் அமைந்துள்ள ஸ்ரீ கைலாச அறக்கட்டளையும், ஆதி ரூபிணி அங்கயரகன்னி உடனுறை ஆதிபரமேஸ்வரர் தியான மையம் சார்பில் 1108 மூலிகை கொண்ட சித்தலிங்கம் வரும் மே 19-ந் தேதி ஸ்ரீ கைலாச அறக்கட்டளை தலைவர் ஸ்ரீ மற்றும் நிர்வாக குழுவினர் தலைமையில் பிரதிஷ்டை செய்ய உள்ளது .
இதனை முன்னிட்டு 1108 மூலிகை கொண்ட சித்தலிங்கம் பெரியகுளம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருக்கோவிலில் இருந்து கைலாச வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வள்ளுவர் சிலை, வடக்கு அக்ரஹாரம், காளத்தீஸ்வரர் கோவில் வழியாக வைத்தீஸ்வரர் கோவில, ; அரண்மனை தெரு, வடக்கு ரத வீதி, சௌராஷ்ட்ரா சத்திரம், கல்லார் ரோடு, அழகர்சாமிபுரம் காவல் குடிசை வழியாக ஆதி பரமேஸ்வரர் தியான மையம் வந்து பிரதிஷ்டை செய்யப்படும்.
இதனைத் தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜைகளும், மாபெரும் விளக்கு பூஜையும் மூலிகை சித்த லிங்கத்திற்கு நடைபெற உள்ளது. இந்த விழாவில் சிவ விசுவ மூர்த்தி , தவத்திரு ஸ்ரீ ஆதீனங்கள், குருமார்கள், சாதுக்கள், சன்னியாசிகள் சிவனடியார்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த 1108 மூலிகை சிவலிங்கத்தின் பயன்கள் குறித்து சிவ சிவ ஸ்ரீ வெள்ளியங்கிரி சுவாமிகள் கூறுகையில், குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய கண்திருஷ்டி, மாங்கல்யதோஷம், குழந்தையின்மை, சுவாசக்கோளாறு, ஞாபகசக்தி போன்ற நோய்கள் மற்றும் தீயசக்திகள் மறைந்து புது பொலிவுடன் விளங்க இந்த மூலிகை சுவாசத்தை தினசரி அரை மணி நேரம் தியானம் செய்தால் போதும் அனைத்து தேக நோய்களும் தீர வாய்ப்பாக அமையும் என குருநாதர் சிவ சிவ ஸ்ரீ வெள்ளையங்கிரி சுவாமிகள் கூறினார்.
அயன் குமார், சிறப்பு நிருபர்
Comments