தேனி-வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்: மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வடம் பிடித்து தொடங்கி வைத்தார்
தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழா தேனி மாவட்டத்தில் முக்கிய திருவிழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இத்திருவிழா 7.5.2024 அன்று தொடங்கப்பட்டு, 14.5.2024 வரை நடைபெறவுள்ளது. இத்திருவிழாவில் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் 10.5.2024 அன்று நடைபெற்றது.
இந்த தேரோட்ட நிகழ்வுக்கு தேனி மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். அப்போது தேர் நிலையில் இருந்து தொடங்கி கோவில் முன்பு வரை சென்று நிறைவு பெற்றது.
இதனைத்தொடர்ந்து தேர் நாளை (11.05.2024) தெற்கு ரத வீதி வரையும், நாளை மறுநாள் (12.05.2024) மேற்கு ரத வீதி வரையும், திங்கள் கிழமை (13.05.2024) வடக்கு ரத வீதி வந்து மாலையில் திருத்தேர் நிலையில் நிறுத்தப்படும்.
இந்த தேரோட்ட நிகழ்வில் மாவட்ட முதன்மை நீதிபதி க.அறிவொளி, மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் ரா.சிவபிரசாத், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி, பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் முத்து மாதவன், தேனி தாசில்தார் ராணி, தேனி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எம்.சக்கரவர்த்தி, வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதா சசி, வீரபாண்டி பேரூர் திமுக செயலாளர் கவுன்சிலர் செல்வராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம் கோவில் செயல் அலுவலர் மாரிமுத்து, மேலாளர் பாலசுப்பிரமணி, கணக்கர் பழனியப்பன் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
பாண்டியன், உதவி ஆசிரியர்
அயன் குமார், சிறப்பு நிருபர்
Comments