
By
SukranNews
தேனி முத்துதேவன்பட்டியில் உள்ள நாடார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 357 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று 100% சாதனை பெற்றுள்ளனர்.
இதில் பள்ளி அளவில் 497 மதிப்பெண்கள் எடுத்து கபிலன் என்ற மாணவன் முதல் இடத்தையும், 495 மதிப்பெண்கள் எடுத்து ஸ்ரீ அர்ச்சனா என்ற மாணவி இரண்டாவது இடத்தையும், 493 மதிப்பெண்கள் எடுத்து சந்தியா ஸ்ரீ,, தன்யா, ஹர்ஷினி ஆகிய 3 பேர் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
மேலும் கணித பாடத்தில் 23 மாணவர்கள் 100/100, அறிவியல் பாடத்தில் 6 மாணவர்கள் 100/100, சமுக அறிவியலில் 1 மாணவன் 100/100 பெற்றுள்ளனர்.
அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பாராட்டி பள்ளி நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் உறவின்முறை பொதுச்செயலாளர் ஆனந்தவேல், உப தலைவர் கணேஷ், பொருளாளர் பழனியப்பன், பள்ளி செயலாளர் பாலசரவணகுமார், இணைச்செயலாளர்கள் வன்னியராஜன், அருண்குமார், பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி உள்பட ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 170 மாணவர்கள் அனைவரும் முழு தேர்ச்சி பெற்று 100 % சாதனை படைத்துள்ளனர்.
இதில் ஷமிர்தா மற்றும் கனிஷா ஆகிய 2 மாணவிகள் 497/500 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், ஸ்ரீ ஜனனி 493/500 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், கார்த்திகா தேவி, ஹரிணி, ரித்திகா மற்றும் திருகருணேஷ் பாண்டியன் ஆகிய 4 மாணவ, மாணவிகள் 490/500 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்
மேலும் கணித பாடத்தில் 15 மாணவர்கள் 100/100, அறிவியல் பாடத்தில் 6 மாணவர்கள் 100/100, சமுக அறிவியலில் 1 மாணவன் 100/100 பெற்றுள்ளனர்.
இவற்றில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ, மாணவிகளை பாராட்டி பள்ளி நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் உறவின்முறை பொதுச்செயலாளர் ஆனந்தவேல், உப தலைவர் கணேஷ், பொருளாளர் பழனியப்பன், பள்ளி செயலாளர் நவமணி, பள்ளி இணைச்செயலாளர்கள் அய்யன் மூர்த்தி, தீபக் கணேஷ், பள்ளி முதல்வர் பூர்ணசெல்வி, பள்ளி துணை முதல்வர் அனுஷா உள்பட ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சதீஷ், இணை ஆசிரியர்
அயன் குமார், சிறப்பு நிருபர்
- Get link
- X
- Other Apps
Labels
கல்வி
Labels:
கல்வி
- Get link
- X
- Other Apps
Comments