Skip to main content

Posts

Showing posts from May, 2024

தேனியில் மாவட்ட அணிகளுக்கு இடையேயான தடகள போட்டி: தேனி USA அணி முதல் இடத்தை பிடித்தது

தேனி யு.எஸ்.ஏ., ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் பல்வேறு மாவட்ட அழைப்பு அணிகளுக்கு இடையேயான தடகள போட்டி தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 29.5.2024 அன்று  நடைபெற்றது. இந்த போட்டிகள் 12 வயது, 14 வயது, 17 வயது, 19 வயது ஆகிய பிரிவினர்களிடையே நடத்தப்பட்டது. இதில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், நீளம் தாண்டுதல், தொடர் ஓட்டம், தட்டு எறிதல் போன்ற போட்டிகள் நடந்தது. இந்த போட்டிகளில் தேனி, கன்னியாகுமரி, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து வீரர்-வீராங்கனைகள் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஒட்டுமொத்த சேம்பியன் பட்டத்தை தேனி யு.எஸ்.ஏ., ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி 267 புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும், பரமக்குடி அணி 168 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தது. இதனைத்தொடர்ந்து விளையாட்டு போட்டிகளில் பெற்ற அணிகள் மற்றும் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தேனி யு.எஸ்.ஏ., ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் வக்கீல் செல்வம் தலைமை தாங்கினார். செயலாளர் சேரலாதன், ஒலிம்பிக் பிசியோ நந்தா, பயிற்சியாளர் பரமேஸ், அகாடமி சட்ட ஆலோசகர்...

தேனியில் உலக பசி தினத்தை முன்னிட்டு அனிபா பிரியாணி சார்பில் உணவு வழங்கல்

உலக பசி தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் ஆதரவற்றோர் 2500 பேருக்கு பசியாற பிரியாணி வழங்கிய நிகழ்ச்சி நடந்தது.  பிரியாணிகளின் ராஜா அனிபா பிரியாணி உணவகம் நடத்திய இந்த நெகிழ்ச்சியான நிகழ்வில் KPY பாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆதரவற்றோருக்கு பிரியாணி வழங்கி மகிழ்ந்தார். ஆண்டுதோறும் மே 28-ம் தேதி உலக பசி தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் பசியால் வாடும் மில்லியன் கணக்கான மக்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்குவதை பல்வேறு நாடுகளில் கடைபிடித்து வருகின்றனர். இந்த ஆண்டு பசி தினத்தை முன்னிட்டு தேனியை தலைமையிடமாக கொண்டு வரும் பிரபல பிரியாணிகளின் உணவகமான அனிபா பிரியாணி ஆதரவற்ற ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக இலவச உணவு வாகனம் தேனி மற்றும் சுற்றுப்புறங்களில் பயணித்து சாலையோரம் இருக்கும் ஆதரவற்றோர், ஆதரவற்றோர் இல்லங்களில் இருப்போர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பிரியாணி வழங்கப்பட்டது. இந்த இலவச உணவு வாகனத்தை முன்னாள் எம்.பி., தங்க ...

தேனியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழா

தேனி நகரில் உள்ள மதுரை சாலையில் பங்களாமேடு பகுதியில் அமைந்துள்ள  ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா 3 நாட்கள் கொண்டாடப்பட்டது. திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தீச்சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல் போன்ற நேர்த்தி கடனை நிறைவேற்றினார்கள். திருவிழாவின் 3 நாள் நிகழ்வில் பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று ஆற்றில் கரைத்தனர். இதனைத்தொடர்ந்து இரவு ஆடலும் பாடலும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கிடையே நிகழ்ச்சியின் போது தேனி நகராட்சி 32-வது வார்டு பகுதியில் இருந்து 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் 3 மதிப்பெண்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது  திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் விழா குழு தலைவர் மாணிக்கம், துணைத்தலைவர் அன்னக்கொடி, விழாக்குழு செயலாளரும், தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற துணைத்தலைவர் வக்கீல் செல்வம், துணைச்செயலாளர் பாலமுருகன், பொருளாளர் ஜோதி மொசைக் செல்லம், இணைச்செயலாளர் ரேணுகா சிமெண்ட் சேதுராமன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். அய்ய...

மாநில அளவிலான வில்வித்தை போட்டி: தேனியை சேர்ந்த சிறுவன் தங்கபதக்கம் வென்றான்

திருச்சி துறையூரில் அவ்யாய பிரபு கலைக்கூடம் சார்பில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி 12.5.2024 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியில் அண்டர் 14 வயது பிரிவில் தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியை சேர்ந்த சிறுவன் நிதின் குமார் கலந்து கொண்டு முதல் பரிசாக தங்க பதக்கம் வென்றான். இதற்கான பரிசளிப்பின் போது மாஸ்டர் ஷீலா தேவி மற்றும் பலர் உடனிருந்தனர்.  அதுபோல தங்க பதக்கம் வென்ற சிறுவன் டி..ஆர் மார்ஷெல் ஆர்ட்ஸ் அகாடமி சார்பாக கலந்து கொண்டு வெற்றி பெற்றான் என்பது குறிப்பிடத்தக்கது. அய்யன் குமார், சிறப்பு நிருபர் 

தேனி நகரில் பல்லாங்குழி சாலையால் வாகன ஓட்டிகள் அவதி: சரிசெய்ய இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்

தேனி நகரில் மதுரை சாலையில் உள்ள ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் கட்டுமானப்பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணியின் காரணமாக பங்களாமேடு கீழே உள்ள தேனி எவரெஸ்ட் ஹோட்டலிருந்து அரண்மனைப்புதூர் விலக்கு இரயில் கேட் வரை பாலம் கட்டும் பணி அருகே ஒருபுறம் வாகனங்கள் சென்று வர சாலை ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்த வரும் மழையின் காரணமாக இந்த சாலை பகுதி குண்டும் குழியுமாக பல்லாங்குழி சாலையாக மாறி உள்ளது. இதனால் இந்த சாலையை கடந்து செல்லும் ஆம்புலன்ஸ் உட்பட வாகனங்கள் அனைத்தும் குலுங்கி குலுங்கி செல்கிறது . இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். எனவே சம்மந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தற்காலிகமாக சாலையை சரி செய்ய முன் வரவேண்டும்  தவறும் பட்சத்தில் இந்து எழுச்சி முன்னணி குண்டும் குழியுமாக உள்ள சாலையை மூடும் போராட்டம் மேற்கொள்ளும் என இந்து எழுச்சி முன்னணி தேனி மாவட்ட தலைவர் இராமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அய்யன் குமார், சிறப்பு நிருபர் 

பெரியகுளத்தில் ஸ்ரீ கைலாச அறக்கட்டளை, ஆதிபரமேஸ்வரர் தியான மையம் சார்பில் 1108 மூலிகை சித்தலிங்கம் பிரதிஷ்டை: மே 19-ந் தேதி நடக்கிறது

தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரையில் அமைந்துள்ள ஸ்ரீ கைலாச அறக்கட்டளையும், ஆதி ரூபிணி அங்கயரகன்னி உடனுறை ஆதிபரமேஸ்வரர் தியான மையம் சார்பில் 1108 மூலிகை கொண்ட சித்தலிங்கம் வரும் மே 19-ந் தேதி ஸ்ரீ கைலாச அறக்கட்டளை தலைவர் ஸ்ரீ மற்றும் நிர்வாக குழுவினர் தலைமையில் பிரதிஷ்டை செய்ய உள்ளது .  இதனை முன்னிட்டு 1108 மூலிகை கொண்ட சித்தலிங்கம் பெரியகுளம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருக்கோவிலில் இருந்து கைலாச வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வள்ளுவர் சிலை,  வடக்கு அக்ரஹாரம்,  காளத்தீஸ்வரர் கோவில் வழியாக வைத்தீஸ்வரர் கோவில, ; அரண்மனை தெரு,  வடக்கு ரத வீதி, சௌராஷ்ட்ரா சத்திரம்,  கல்லார் ரோடு,  அழகர்சாமிபுரம் காவல் குடிசை வழியாக ஆதி பரமேஸ்வரர் தியான மையம் வந்து பிரதிஷ்டை செய்யப்படும்.  இதனைத் தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜைகளும், மாபெரும் விளக்கு பூஜையும் மூலிகை சித்த லிங்கத்திற்கு நடைபெற உள்ளது.  இந்த விழாவில் சிவ விசுவ மூர்த்தி  , தவத்திரு ஸ்ரீ ஆதீனங்கள், குருமார்கள், சாதுக்கள், சன்னியாசிகள் சிவனடியார்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர்.  இந்த 1108 மூலிகை சிவலிங...

தேனி கவுரா நாயுடு கல்வி மேம்பாட்டு சங்கத்தின் முப்பெரும் விழா

தேனி கவுரா நாயுடு கல்வி மேம்பாட்டு சங்கத்தின் 7-ம் ஆண்டு ஆண்டு விழா, சலங்கை பூஜை, வேலைவாய்ப்பு மையம் என முப்பெரும் விழா தேனி அம்பி வெங்கிடசாமி நாயுடு திருமண மண்டபத்தில் 12.5.2024 அன்று நடைபெற்றது.  விழாவுக்கு தேனி கவுரா நாயுடு கல்வி மேம்பாட்டு சங்க கௌரவ தலைவர் நாராயணசாமி நாயுடு, தேனி கவுரா நாயுடு கல்வி மேம்பாட்டு சங்க தலைவர் சுப்புராம் நாயுடு ஆகியோர் தலைமை தாங்கினர். தேனி மாவட்ட நாயுடு மகாஜன சங்க தலைவர் பாலகுரு நாயுடு, பொருளாளர் நவநீதகிருஷ்ணன், தேனி கவுரா நாயுடு கல்வி மேம்பாட்டு சங்க செயலாளர் முத்துகிருஷ்ணன், அல்லிநகரம் நாயுடு மகாஜன சங்கத் தலைவர் சுப்புராஜ், செயலாளர் விஜயன், பொருளாளர் பாலகுரு, அம்பி வெங்கிடசாமி திருமண மண்டப தலைவர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  விழாவில் தொழிலதிபர்கள்  கம்பம் மனோகரன், ரியல் எஸ்டேட் வீரராஜ், தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் வி.ஆர்.ராஜன், தேனி கவுரா நாயுடு கல்வி மேம்பாட்டு சங்க பரதநாட்டிய ஆசிரியர் லதா உள்பட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்  விழாவின் போது மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது....

தேனி-வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்: மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வடம் பிடித்து தொடங்கி வைத்தார்

தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழா  தேனி மாவட்டத்தில் முக்கிய திருவிழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.  இத்திருவிழா 7.5.2024 அன்று தொடங்கப்பட்டு, 14.5.2024 வரை நடைபெறவுள்ளது. இத்திருவிழாவில் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் 10.5.2024 அன்று நடைபெற்றது. இந்த தேரோட்ட நிகழ்வுக்கு தேனி மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். அப்போது தேர் நிலையில் இருந்து தொடங்கி கோவில் முன்பு வரை சென்று நிறைவு பெற்றது.  இதனைத்தொடர்ந்து தேர் நாளை (11.05.2024) தெற்கு ரத வீதி வரையும், நாளை மறுநாள் (12.05.2024) மேற்கு ரத வீதி வரையும், திங்கள் கிழமை (13.05.2024) வடக்கு ரத வீதி வந்து மாலையில் திருத்தேர் நிலையில் நிறுத்தப்படும். இந்த தேரோட்ட நிகழ்வில் மாவட்ட முதன்மை நீதிபதி க.அறிவொளி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா.சிவபிரசாத், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி, பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் முத்து மாதவன், தேனி தாசில்தார் ராணி, தேனி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எம்.சக்கரவர்த்தி, வீரபா...

தேனி நாடார் மெட்ரிக் மற்றும் வித்யாலயா பள்ளி 10-ம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி பெற்று சாதனை

தேனி முத்துதேவன்பட்டியில் உள்ள நாடார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 357 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று 100% சாதனை பெற்றுள்ளனர்.  இதில் பள்ளி அளவில் 497 மதிப்பெண்கள் எடுத்து கபிலன் என்ற மாணவன் முதல் இடத்தையும், 495 மதிப்பெண்கள் எடுத்து ஸ்ரீ  அர்ச்சனா என்ற மாணவி இரண்டாவது இடத்தையும், 493 மதிப்பெண்கள் எடுத்து சந்தியா ஸ்ரீ,, தன்யா, ஹர்ஷினி ஆகிய 3 பேர் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். மேலும் கணித பாடத்தில் 23 மாணவர்கள் 100/100, அறிவியல் பாடத்தில் 6 மாணவர்கள் 100/100, சமுக அறிவியலில் 1 மாணவன் 100/100 பெற்றுள்ளனர்.  அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பாராட்டி பள்ளி நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் உறவின்முறை பொதுச்செயலாளர் ஆனந்தவேல், உப தலைவர் கணேஷ், பொருளாளர் பழனியப்பன், பள்ளி செயலாளர் பாலசரவணகுமார்,  இணைச்செயலாளர்கள் வன்னியராஜன், அருண்குமார், பள்ளி முதல்வர் ...

தேனி-வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில் திருவிழாவிற்கான ராட்டினங்கள் சோதனை ஓட்டம்: பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு

தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.  இந்த ஆண்டுக்கான திருவிழா வருகின்ற 7-ம் தேதி (நாளை மறுநாள்) செவ்வாய்க்கிழமை தொடங்கி 14-ம் தேதி செவ்வாய்க்கிழமை வரை நடைபெற உள்ளது.  இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகின்ற 10-ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இந்நிலையில் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக ஆண்டுதோறும் எந்திர ராட்டினங்கள் இயக்கப்படும்.  இந்த ராட்டினங்கள் அமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று முடிந்த நிலையில், இதில் இயந்திர ராட்டின வகைகளான கொலம்பஸ் (Big), கொலம்பஸ் மினி, டிராகன் டிரெயின், பிரேக் டான்ஸ், கப் & சாசர், சிலம்போ (மினி குழந்தைகள்), ஆக்ட்டோபாஸ், மினி டோரா டோரா (குழந்தைகள்), கிராஸ் வீல், டிஸ்கோ கோஸ்டர்  சாகச கிணறு என 14 வகையான ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளின் தரம் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ராட்டினங்களை சோதனை ஓட்டம் செய்து பணிகளில் குறைபாடுகள் உள்ளனவா என்பது குறித்து ...

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் பன்னாட்டு நிறுவனத்தின் விரிவாக்க மையம் திறப்பு

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் பெங்களூர் பன்னாட்டு நிறுவனமான WG Tech Solution Pvt.Ltd. நிறுவனத்தின் விரிவாக்க மைய அலுவலக திறப்பு விழா 3.5.2024 அன்று நடைபெற்றது.  விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். உறவின்முறை உபதலைவர் கணேஷ். பொதுச்செயலாளர் ஆனந்தவேல் பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கல்லூரியின் செயலாளர்கள் ராஜ்குமார். மகேஸ்வரன், இணைச்செயலாளர் நவீன்ராம் கல்லூரியின் முதல்வர் டாக்டர் மதளைசுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தேனி நாடார் சரஸ்வதி பொறியியல்  மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் WG Tech Solution Pvt.Ltd. நிறுவனத்தின் விரிவாக்க மைய அலுவலகத்தை அந்நிறுவனத்தின் CEO கண்ணன் ஸ்ரீனிவாசகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.  இதனைத்தொடர்ந்து அவர் பேசுகையில், இந்நிறுவனத்தின் விரிவாக்க GOHELLA அலுவலகத்தின் மூலம் நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ECE துறையை சேர்ந்த 5 மாணவர்களுக்கு (அஜந்த மீனா, கிறிஸ்டி, மேனகா, நந்தினி மற...

தேனி அல்லிநகரத்தில் அ.ம.மு.க சார்பில் பொதுமக்களின் தாகம் தீர்க்க நீர் மோர்:

தேனி வடக்கு நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நீர் மோர் பந்தல் அல்லிநகரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பந்தலில் நீர்மோர் வழங்கும் பணி 3.5.2024 அன்று நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு தேனி வடக்கு நகர செயலாளர் குரு கணேஷ் தலைமை தாங்கினார்.  அமமுக அமைப்பு செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் கதிர்காமு முன்னிலை வகித்தார்.   நிகழ்ச்சியின் போது தேனி வடக்கு மாவட்ட செயலாளர் காசிமாயன் நீர்மோர், தண்ணீர் மற்றும் தர்பூசணி பழங்கள் பொதுமக்களுக்கு வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் அ.ம.மு.க நிர்வாகிகள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். பாண்டியன், உதவி ஆசிரியர்