Skip to main content

தேனி-வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில் திருவிழாவிற்கான ராட்டினங்கள் சோதனை ஓட்டம்: பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு

தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. 

இந்த ஆண்டுக்கான திருவிழா வருகின்ற 7-ம் தேதி (நாளை மறுநாள்) செவ்வாய்க்கிழமை தொடங்கி 14-ம் தேதி செவ்வாய்க்கிழமை வரை நடைபெற உள்ளது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகின்ற 10-ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

இந்நிலையில் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக ஆண்டுதோறும் எந்திர ராட்டினங்கள் இயக்கப்படும். 


இந்த ராட்டினங்கள் அமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று முடிந்த நிலையில், இதில் இயந்திர ராட்டின வகைகளான
கொலம்பஸ் (Big), கொலம்பஸ் மினி, டிராகன் டிரெயின், பிரேக் டான்ஸ், கப் & சாசர், சிலம்போ (மினி குழந்தைகள்), ஆக்ட்டோபாஸ், மினி டோரா டோரா (குழந்தைகள்), கிராஸ் வீல், டிஸ்கோ கோஸ்டர் சாகச கிணறு என 14 வகையான ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பணிகளின் தரம் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ராட்டினங்களை சோதனை ஓட்டம் செய்து பணிகளில் குறைபாடுகள் உள்ளனவா என்பது குறித்து சென்னை பொதுப்பணித்துறை பணிமனை கண்காணிப்பு பொறியாளர் கோபாலகிருஷ்ணன், செயற்பொறியாளர் ஆஸம் பாஷா ஆகியோர் சோதனை செய்து பார்வையிட்டனர்.

இந்த ஆய்வின் போது ராட்டினம் ஏலதாரர் அம்மன் அமியூஸ்மென்ட் நிர்வாக இயக்குனர் சக்தி மற்றும் பொறுப்பாளர்கள் கிருஷ்ணன், பாபு, சுரேஷ், உள்பட பலர் உடனிருந்தனர்.

நாகராஜ், ஆசிரியர் 

பாண்டியன், உதவி ஆசிரியர் 

Comments