தேனி மாவட்டம், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை நலம் மற்றும் நோய் கட்டுப்பாட்டு திட்டத்தில் ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் செம்மறி மற்றும் வெள்ளாடுகளுக்கு ஆட்டுக் கொல்லி நோய் வராமல் தடுக்கும் பொருட்டு தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் அனைத்து கிராமங்களில் முதல் இலவச தடுப்பூசி முகாம் 29.4.2024 அன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த முகாமிற்கான தொடக்க நிகழ்ச்சி தேனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட,, வீரபாண்டி பேரூராட்சி உட்கடை கிராமமான சத்திரப்பட்டியில் இன்று நடைபெற்றது.
இந்த முகாமினை தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி தொடங்கி வைத்து ஆடுகளுக்கு தடுப்பூசி போடும் பணிகளை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் வீரபாண்டி பேரூராட்சி கவுன்சிலர் பிரசாந்தினி ஜெயசந்திரன், கால்நடை பராமரிப்பு துறை தேனி மண்டல இணை இயக்குனர் கோயில் ராஜா, உதவி இயக்குனர்கள் சுப்பிரமணியன், சிவரத்தினா, பாஸ்கரன், டாக்டர்கள் செல்வம், ரஜினிகாந்த், மோகனப்பிரியா, கண்ணன் மற்றும் ஆய்வாளர் வேல்முருகன், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மகாகிருஷ்ணன் உள்பட கலர் கலந்து கொண்டனர்.
இந்த தடுப்பூசி முகாமின் மூலம் தேனி மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஆடுகளுக்கு, ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான முகாம் 29.4.2024 முதல் 28.5.2024 வரை நடைபெற உள்ளது எனவும் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாண்டியன், உதவி ஆசிரியர்
Comments