Skip to main content

வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா: ராட்டினம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை

தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. 

இந்த ஆண்டுக்கான திருவிழா அடுத்த மாதம் 7-ம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கி 14-ம் தேதி செவ்வாய்க்கிழமை வரை நடைபெற உள்ளது. 

இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் அடுத்த மாதம் 10-ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

இந்நிலையில் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக ஆண்டுதோறும் எந்திர ராட்டினங்கள் இயக்கப்படும். 

இந்த ராட்டினங்கள் அமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக ராட்டினம் அமைக்கும் பணிக்கு கணபதி ஹோமத்துடன் பூமி பூஜை 27.4.2024 இன்று நடைபெற்றது. 

இந்த பூமி பூஜையில் அம்மன் அமியூஸ்மென்ட் நிர்வாக இயக்குனர் சக்தி மற்றும் பொறுப்பாளர்கள் கிருஷ்ணன், குணசேகரன், பாபு, சுரேஷ், சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


பாண்டியன், உதவி ஆசிரியர் 

Comments