Skip to main content

தேனி: நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பணிநியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது.  விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். உறவின்முறை உபதலைவர் கணேஷ். பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


கல்லூரி செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன், இணைச்செயலாளர் நவீன்ராம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவிற்கு வந்த அனைவரையும் கல்லூரி முதல்வர் டாக்டர். மதளைசுந்தரம்  வரவேற்புரையாற்றி மாணவர்களிடையே வேலைவாய்ப்பு பெறுவது பற்றியும், கல்லூரியின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் பன்னாட்டு நிறுவனத்துடன் சிறந்த பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு பன்னாட்டு நிறுவனங்களின் மென்பொருள் கட்டமைப்புகளுடன் கூடிய பயிற்சியை மாணவர்களுக்கு அளித்து வருகிறதென்றும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலமாக இன்டெர்ன்ஷிப் மற்றும் வேலைவாய்ப்பு பெற ஆக்கபூர்வமான முறையில் கல்லூரியில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறதென்றும். கல்லூரியின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை பேராசிரியர்கள் அனைத்து துறை மாணவர்களும் வேலைவாய்ப்பு பெறுவதற்கு திறனறியும் தேர்வு, குரூப் டிஸ்கசன், எழுத்து தேர்வு, நேர்முக தேர்வை தயக்கமின்றி அணுகுவதற்கும், ஆங்கிலத்தில் பேசுவதற்கான பயிற்சிகள், போன்றவற்றை மாணவர்களுக்கு சிறந்த முறையில் அளிக்கப்பட்டு வருடந்தோறும் 80% மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறதென்று மாணவர்களிடையே உரையாற்றினார்.

கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் டாக்டர்.கார்த்திகேயன் வேலைவாய்ப்பு துறையின் அறிக்கையினை சமர்பித்தார். 
மேலும் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களான ஜோஹோ, எம் அண்டு எக்ஸ், ஆரா எனர்ஜி, வின்டோரிக்ஸ், ரிஹாமி சொலியூசன்ஸ், ஐஜேஎல், நியோலிங்க், பரோமாதா ரீபர் பிரைவேட் லிமிடெட். டேட்டா பேட்டன்ஸ், டெல்பி டிவி எஸ். டபிள்யூ ஜி டெக் சொலியூசன்ஸ், மெர்குரி பில்டர்ஸ் ZF கமர்சியல் வெகிக்கள். போன்ற நிறுவனங்களில் 102 மாணவ, மாணவிகள் கல்லூரியின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் வேலைவாய்ப்பை பெற்றனர்.

இவற்றில் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் முன்னனி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்ற 102 மாணவ மாணவிகளுக்கு பணிநியமன ஆணைகளை தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் நிர்வாகிகள் வழங்கினார்கள்.
விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், அனைத்து கல்வி நிறுவனங்களின் செயலாளர்கள், இணைச்செயலாளர்கள், கல்வி நிறுவனங்களின் கமிட்டி உறுப்பினர்கள், தலைமை ஆசிரியர்கள், மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழாவில் கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் சத்யா. வேலைவாய்ப்பு துறை பேராசிரியர்கள், மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி துணை முதல்வர் மாதவன் நன்றி கூறினார்.

பாண்டியன், உதவி ஆசிரியர் 

Comments